இலங்கைசெய்திகள்

ஐரோப்பாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதிகள்

tamilni 92 scaled
Share

ஐரோப்பாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதிகள்

இலங்கைக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட போதைப்பொருள் பார்சல்களை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது போதைப் பொருட்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 25 பார்சல்களை ஆய்வு செய்த போது இந்த போதை பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அங்கு 2193 Ecstasy என்ற Methamphetamine மாத்திரைகளும், 1740 கிராம் குஷ் மருந்தும், 29 கிராம் Amphetamine போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டன.

கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதைப்பொருளின் பெறுமதி சுமார் 43 மில்லியன் ரூபாய் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு, மஹரகம, பத்தரமுல்லை, பொரலஸ்கமுவ, பாணந்துறை, மொரட்டுவ மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களின் முகவரிகளுக்கு ஜேர்மனி மற்றும் பிரித்தானியாவில் இருந்து இந்த பொதிகள் அனுப்பப்பட்டுள்ளன.

விசாரணையில் அவை போலியான முகவரிகள் என தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் இந்த போதைப்பொருள் கையிருப்பு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...