இலங்கைசெய்திகள்

இலங்கையில் ஹோட்டல் வாங்கி விருந்து வைத்த வெளிநாட்டவருக்கு நேர்ந்த கதி

rtjy 33 scaled
Share

இலங்கையில் ஹோட்டல் வாங்கி விருந்து வைத்த வெளிநாட்டவருக்கு நேர்ந்த கதி

அஹங்கம பிரதேசத்தில் சுற்றுலா ஹோட்டல் ஒன்றினை வைத்திருக்கும் அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர் சிலரால் தாக்கப்பட்டுள்ளார்.

அவர் தற்போது கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தாக்குதல் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்ட போதிலும், அவர்களை பின்னர் விடுவிக்க அஹங்கம பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த 2ஆம் திகதி இரவு காலி அஹங்கம பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஹோட்டலின் உரிமையாளரான மார்க் வில்லியம்ஸ் என்ற 57 வயதுடைய அவுஸ்திரேலிய நபரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

மூன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த இந்த ஹோட்டலை கொள்வனவு செய்வர் கடந்த 2ம் திகதி இரவு மீண்டும் திறப்பு விழா நடத்தியுள்ளார்.

இதில் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கலந்து கொண்டனர். ஆனால், இந்த ஹோட்டலுக்கு அடுத்த இடத்தில் வேறு விருந்து நடத்திக் கொண்டிருந்த சுமார் 15 பேர் கொண்ட கும்பல் ஹோட்டலுக்கு வந்து நிகழ்ச்சியை நிறுத்துமாறு மிரட்டியுள்ளனர்.

ஹோட்டலின் உரிமையாளரான வெளிநாட்டவர் இது குறித்து விசாரிக்க வந்தபோது, ​​கும்பல் அவரைத் தாக்கியுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த அவர் தற்போது கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அஹங்கம பொலிஸார் தாக்குதல் தொடர்பில் மூவரை கைது செய்து பின்னர் விடுவித்துள்ளனர்.

Share
Related Articles
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...