rtjy 272 scaled
இலங்கைசெய்திகள்

மத்திய வங்கிக்குள் திருடர்கள்: காணாமல் போன நிதி

Share

மத்திய வங்கிக்குள் திருடர்கள்: காணாமல் போன நிதி

மத்திய வங்கிக்குள் திருடர்கள் உள்ளார்கள் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது எனவும், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால், லக்ஷ்மன் ஆகியோருக்கு தொடர்ந்து ஓய்வூதியம் வழங்கப்படுமா ? எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா, கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (28.11.2023) இடம்பெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில்,

“மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால், லக்ஷ்மன் ஆகியோர் பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக் கூற வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆகவே இவர்களுக்கு தொடர்ந்து ஓய்வூதியம் வழங்கப்படுமா?”

மத்திய வங்கி அதியுயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது. அவ்வாறான நிலையில் மத்திய வங்கியின் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள நிதி காணாமல் போயுள்ளதை அலட்சியப்படுத்த முடியாது.

மத்திய வங்கிக்குள் அதியுயர் பாதுகாப்புக்கு மத்தியில் நிதி காணாமல் போகிறது என்றால் மக்கள் எவ்வாறு நம்பிக்கை கொள்வார்கள்.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் சேவையில் இருந்து ஓய்வுப் பெறுவதற்கு முன்னர் ஆளுநர்களுக்கான சம்பளத்தை 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவில் இருந்து 4 இலட்சமாக அதிகரித்துக் கொண்டார். தனக்கான கொடுப்பனவுகளை உறுதிப்படுத்திக் கொண்டார்.

ஆகவே இவர்களுக்கு தொடர்ந்து ஓய்வூதிய கொடுப்பனவு வழங்குவது நியாயமானதா? மக்களின் வரிப்பணத்தை கொண்டு இவர்களுக்கு தொடர்ந்து ஓய்வூதியம் வழங்குவதை இடைநிறுத்த அமைச்சு மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க,

“மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான கப்ரால்,லக்ஷ்மன் ஆகியோருக்கு ஓய்வூதிய கொடுப்பனவு விங்குவது தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர், சட்டமா அதிபர் ஆகியோருடன் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை அறிவிக்கிறேன்.

திடீரென கேள்வி எழுப்பும் போது அதற்கு என்னால் உடனடியாக பதிலளிக்க முடியாது.” என்றார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...