rtjy 194 scaled
இலங்கைசெய்திகள்

அமெரிக்காவில் இருந்து இலங்கை பெண்ணுக்கு வந்த பொதியால் அதிர்ச்சி

Share

அமெரிக்காவில் இருந்து இலங்கை பெண்ணுக்கு வந்த பொதியால் அதிர்ச்சி

வெளிநாடு ஒன்றில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட சட்டவிரோத போதைப்பொருள் ஒரு தொகுதி சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இருந்து விமானப் பொதிகள் மற்றும் தபால்கள் மூலம் கொழும்பு ட்ரைகோ சரக்குகளை அகற்றும் முகவர் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

அத்துடன், சுங்க கண்காணிப்பு பிரிவின் அதிகாரிகளால் இன்று அவை கைப்பற்றப்பட்டுள்ளன. கொக்கெய்ன் மற்றும் மரிஜுவானா ஆகியவை நுட்பமான முறையில் அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த போதைப்பொருளின் சந்தை மதிப்பு 6 கோடியே 69 லட்சத்து 40ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பொதி கம்பஹா பகுதியில் உள்ள பெண் ஒருவரின் குடியிருப்பு முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளதென சுங்க ஊடகப் பேச்சாளர் சுங்கப் பணிப்பாளர் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள ட்ரைகோ நிறுவனத்தில் சந்தேகத்திற்கிடமான பார்சல் இன்று திறக்கப்பட்டதுடன், உணவு கேனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 05 கிலோ 161 கிராம் மரிஜுவானா மற்றும் 511 கிராம் கொக்கெய்ன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த பெண்ணின் எழுத்துமூல அனுமதியுடன் டிரைகோ நிறுவனத்திற்கு இந்த பெற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய ஒருவரும் இந்த நிறுவனத்தில் கடமையாற்றும் உதவி சுங்க அத்தியட்சகர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2Fka10y8tLGVxpVydY2Opn
செய்திகள்உலகம்

பிரித்தானிய நிதியமைச்சரின் வரவு செலவுத் திட்டம்: பங்குச் சந்தை முதலீட்டை ஊக்குவிக்கச் சேமிப்புக் கணக்கு வரம்பு குறைய வாய்ப்பு!

பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) நாளைய தினம் (நவம்பர் 26) தனது வருடாந்தர...

articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...