tamilni 302 scaled
இலங்கைசெய்திகள்

குடும்பத்துடன் நாடு திரும்பியவர் விமான நிலையத்தில் கைது

Share

குடும்பத்துடன் நாடு திரும்பியவர் விமான நிலையத்தில் கைது

திருகோணமலை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு போதைப்பொருள் வழங்கிய நபர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது குடும்பத்துடன் தாய்லாந்திற்கு சுற்றுலா சென்று இலங்கை திரும்பிய போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கொழும்பு, பொரளை பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடையவராகும்.

அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் தாய்லாந்து பயணத்தை முடித்துக் கொண்டு பேங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமானமான UL-405 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
pregnancy 2 2024 09 778bfd6d1c1bc7106948a179ec619652
இலங்கைசெய்திகள்

பெண்கள் 51.7% – 15 வயதுக்குட்பட்டோர் எண்ணிக்கை குறைவு!

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இலங்கையின் மொத்த சனத்தொகையில் பாலினப் பங்கீடு மற்றும்...

33 8 696x392 1
இலங்கைசெய்திகள்

பிள்ளையானை மேலும் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க உத்தேசம்: அடிப்படை உரிமை மனு நாளை விசாரணைக்கு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவர்களை, மேலும் 90 நாட்கள் தடுப்புக் காவலில்...

25 69035b0d8bf92
இலங்கைஏனையவைசெய்திகள்

அவுஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த பிக்குக்கு சிறைத்தண்டனை விதிப்பு

அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக...

25 690304e16a39e
அரசியல்இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: ஆயுதம் கோரிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், வெளிநாட்டிலிருந்து தற்காப்புக்காக மூன்று ஆபத்தான மிளகு ஸ்ப்ரேக்கள்...