tamilni 263 scaled
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலையை நிலையானதாக்க விசேட கூட்டத்தொடர்

Share

எரிபொருள் விலையை நிலையானதாக்க விசேட கூட்டத்தொடர்

வருங்கால தேவையின் போக்கிற்கு ஏற்ப, கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க பரிசீலித்து வருவதாக ஒபெக் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அடுத்த ஒபெக் கூட்டத்தொடர் நவம்பர் 26ம் திகதி நடைபெறும் என்றும், குறித்த கூட்டத்திற்கு பிறகு இது தொடர்பிலான இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் , எரிபொருள் விலையை நிலையானதாக வைத்திருப்பதற்காக எதிர்காலத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் இறுதியாக இம்மாதம் முதலாம் திகதி(01.11.2023) எரிபொருள் விலையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 356 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 423 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, ஒட்டோ டீசல் 356 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, ஒரு லீட்டர் சுப்பர் டீசல் 431 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 7 ரூபாவினால் ​அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 249 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...