tamilni 236 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை மக்களுக்கு தொடரும் நெருக்கடி

Share

இலங்கை மக்களுக்கு தொடரும் நெருக்கடி

அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதைத் தவிர மாற்று வழி இல்லை. வருமானத்தை அதிகரிப்பதற்கு வரிகளை அதிகரிக்க வேண்டும். எனவே குறுகிய காலத்துக்கேனும் வரிசுமைகளை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்றையதினம்(15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

சுதந்திரத்துக்கு பின்னர் உத்தியோகபூர்வமாக இலங்கை வங்குரோத்தடைந்த நாடு என்று அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியின் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் வரவு மற்றும் செலவுக்கிடையிலான பற்றாக்குறை கடன் மூலமும், தேசிய சொத்துக்களை விற்பதன் ஊடாகவும், பணத்தை அச்சிடுவதன் ஊடாகவும் முகாமை செய்யப்பட்டது.

ஆனால் இம்முறை எமக்கு அந்த மூன்று வழிகளையுமே அணுக முடியாது. எனவே அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதைத் தவிர மாற்று வழி இல்லை.

வருமானத்தை அதிகரிப்பதற்கு வரிகளை அதிகரிக்க வேண்டு0ம். எனவே குறுகிய காலத்துக்கேனும் வரிசுமைகளை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

எவ்வாறிருப்பினும் தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவு திட்டம் முற்போக்கானதாகும்.

எனவே அதனை நிறைவேற்றியவுடன் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இரண்டாம் கட்ட கடன் தொகையைப் பெற்றுக் கொள்ள முடியும். நாணய நிதியத்திடமிருந்து கடன் தொகையைப் பெற்றுக் கொள்வதன் ஊடாக சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். எனவே இடைநிறுத்தப்பட்டுள்ள கடன்கள் மீளக் கிடைக்கப்பெறும். அதன் மூலம் நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிக்க முடியும்.

அபிவிருத்திகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் போது இலங்கை வங்குரோத்து நிலைமையிலிருந்து முழுமையாக மீளும். அதன் பின்னர் ஸ்திரமான பொருளாதாரப்பாதையில் எம்மால் பயணிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...