tamilni 179 scaled
இலங்கைசெய்திகள்

வரவு செலவுத் திட்டம் ஐக்கிய தேசியக் கட்சியுடையது: சாடுகிறார் ராஜித

Share

வரவு செலவுத் திட்டம் ஐக்கிய தேசியக் கட்சியுடையது: சாடுகிறார் ராஜித

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஐக்கிய தேசியக் கட்சியின் வரவு செலவுத் திட்டம் எனவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் மாத்திரமே இதனை ஆதரிக்க முடியும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன சாடியுள்ளார்.

வரவு செலவுத் திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியினரால் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

“இந்த வரவு – செலவு திட்டத்தில் குறைசொல்லும்படி எந்த ஒரு விடயமும் இல்லை. ஒவ்வொரு தரப்பினருக்குமான சில ஒதுக்கீடுகளை வழங்கியுள்ளது.

ஆனால், நாடாளுமன்ற வரலாற்றைப் பார்த்தால், எத்தனை முன்மொழிவுகள் கொண்டு வரப்படுகின்றன. எத்தனை முன்மொழிவுகள் நிறைவேற்றப்படுகின்றன.

மக்களுக்கு எது முக்கியம்? முன்மொழிவுகள் அல்ல, நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதுதான்.

அடுத்த ஆண்டு இறுதியில் இவை எந்த அளவுக்கு செயல்படுத்தப்படுகின்றன என்பதுதான் முக்கியம்.

இந்த வரவு செலவுத் திட்டம் ஐக்கிய தேசியக் கட்சியின் வரவு செலவுத் திட்டம். இதில் ஐக்கிய தேசியக் கட்சியினால் செய்ய முடியாத பல விடயங்கள் உள்ளன” என்றார்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....