rtjy 133 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ள மிகப்பெரிய நிறுவனங்கள்

Share

இலங்கையில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ள மிகப்பெரிய நிறுவனங்கள்

தற்போது இந்தியாவின் அதானி, டாட்டா போன்ற நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஆயத்தமாகியுள்ளன, மேலும், சீனாவின் துறைமுக நகர நிறுவனம், சினோபெக் நிறுவனம் பாரியளவில் முதலீடுகளைச் செய்ய ஆரம்பித்துள்ளன என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஆரம்பத்தில், எமக்கு முக்கியமாக இருந்தது சர்வதேசத்தில் நமது நாட்டைப் பற்றிய சரியான பிம்பத்தை உருவாக்குவதேயாகும். நாடு மிகவும் மோசமான நிலையில் வீழ்ச்சியடைந்த ஒரு காலகட்டத்தின் பின்னர் மீண்டும் எழுந்திருப்பதற்குத் தேவையான மறுசீரமைப்பைச் செய்வதற்கு அரசாங்கத்தினால் முடிந்திருக்கின்றது.

இந்த நிலையில்தான் சர்வதேசமும் எம்மோடு இணைந்து கொள்கிறது. அந்தச் செய்தி சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாகவே செல்ல வேண்டும்.

அதன் காரணமாகத்தான் சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக நாம் செய்து கொண்ட ஒப்பந்தம் எமக்கு முக்கியமாகின்றது.

கடன் தொகையின் முதல் தவணை பெறப்பட்டதன் மூலம், நாட்டை படுகுழியில் இருந்து மீட்க நாம் எடுத்த நடவடிக்கை வெற்றிகரமான ஒன்று என்பது உறுதியானது.

அதன் மூலம் உலக வங்கி எமக்கு உதவி செய்ய ஆரம்பித்தது. ஆசிய அபிவிருத்தி வங்கி உதவி செய்யத் தொடங்கியது. கடன் மறுசீரமைப்பைச் செய்வதற்கு அனைத்தும் மிகவும் முக்கியமானதாகியது. இவற்றால் வரும்காலங்களில் முதலீடுகள் இலங்கைக்கு வரத் தொடங்கும்.

தற்போது இந்தியாவின் அதானி, டாட்டா போன்ற நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஆயத்தமாகியுள்ளன. சீனாவின் துறைமுக நகர நிறுவனம், சினோபெக் நிறுவனம் பாரியளவில் முதலீடுகளைச் செய்ய ஆரம்பித்துள்ளன. அண்மையில் அமெரிக்காவின் டீ. எப். சீ என்ற நிறுவனம் பல்வேறு துறைகளில் ஒரு பில்லியன் டொலர் நிதியை முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையில் மாத்திரம் 533 மில்லியன் டொலரை முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சி வேலைத்திட்டம் தொடர்பில் சர்வதேச சமூகத்தில் ஒரு நம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டுள்ளதை இதிலிருந்து நாம் அறியலாம் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 5
உலகம்செய்திகள்

நுளம்புகள் இல்லாத கடைசி இடமாக கருதப்பட்ட ஐஸ்லாந்தில் முதல் முறை நுளம்பு கண்டுபிடிப்பு!

பூமியில் நுளம்புகள் முற்றிலும் இல்லாத இரண்டு இடங்களாக ஐஸ்லாந்து மற்றும் அண்டார்டிகா மட்டுமே கருதப்பட்டு வந்தது....

images 5 2
செய்திகள்இலங்கை

ஏற்றுமதித் துறை ஸ்திரமான வளர்ச்சி: 9 மாதங்களில் $12.98 பில்லியன் வருவாய் – EDB அறிக்கை!

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) வெளியிட்டுள்ள தகவலின்படி, 2025 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான...

25 68fa28324343d
செய்திகள்இலங்கை

பாதாள உலகக் குற்றவாளி பெக்கோ சமனுக்குச் சொந்தமான ₹8 கோடி மதிப்புள்ள சொகுசுப் பேருந்துகள் பறிமுதல்!

பாதாள உலகக் குற்றவாளியான பெக்கோ சமனுக்குச் சொந்தமான 8 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 2...

25 68fa2cc1432fd
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

முன்மொழியப்பட்ட தேசிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வரைவு எனக் கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் போலி...