இலங்கைசெய்திகள்

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் பல முறைகேடுகள்!

rtjy 94 scaled
Share

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் பல முறைகேடுகள்!

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில்,பல்வேறு நிர்வாக திறமையின்மைகள் மற்றும் முறைகேடுகள் உள்ளதாக நாடாளுமன்ற கோப் குழு கண்டறிந்துள்ளது.

அத்துடன் அவசர தேவைகளுக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைகளில் போதுமான எரிபொருள் இருப்புக்கள் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் நிலவும், பல நிர்வாக திறமையின்மைகள் மற்றும் முறைகேடுகளை வெளிப்படுத்துவதற்காக கோப் குழு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மாபா பத்திரன மற்றும் கூட்டுத்தாபனத் தலைவர் சாலிய விக்ரமசூரிய உட்பட பல அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

அவர்களுடனான கூட்டத்தின்போது கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான, கூட்டுத்தாபனத்தின் தற்போதைய செயல்திறன் ஆகியவை ஆராயப்பட்டன.

இதன்போது கோப் குழு எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கூட்டுத்தாபன அதிகாரி ஒருவர், நாட்டில் அவசரகால சூழ்நிலையில் பயன்படுத்த, சேமிப்புக் கிடங்குகளில் 60,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 45,000 மெட்ரிக் டன் பெட்ரோலைப் பராமரித்து வருவதாகக் கூறியுள்ளார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...