rtjy 75 scaled
இந்தியாஇலங்கைசெய்திகள்

இலங்கையர் உட்பட 4 பேர் தமிழக பொலிஸாரால் கைது

Share

இலங்கையர் உட்பட 4 பேர் தமிழக பொலிஸாரால் கைது

சட்டவிரோத பணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் சுமார் ஒரு கோடி இந்திய ரூபாய் பணத்துடன் அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை பிரஜை உட்பட 4 பேரை தமிழகம் சென்னை மாநகர பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னை எம்.ஜி.ஆர் நகர் பொலிஸ் நிலைய அதிகாரிகள், வான் ஒன்றுக்குள் இருந்த 4 பேரை விசாரணை செய்தபோது, அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த வான் வண்டியை சோதனை செய்ததில், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இந்திய ரூபாய் தாள்கள் அடங்கிய பணத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்நிலையில் அந்த பணத்துக்கான முறையான ஆவணங்கள் எதுவும் இருக்கவில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதற்கமைய குறித்த நான்கு பேருடன், கைப்பற்றப்பட்ட பணம் கே.கே.நகர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...