rtjy 49 scaled
இலங்கைசெய்திகள்

ஹரக் கட்டா தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் தகவல்

Share

ஹரக் கட்டா தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் தகவல்

தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள ‘ஹரக் கட்டா’ என்ற பிரபல குற்றவாளியான நடுன் சிந்தக விக்கிரமரத்ன தாம் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதை தவிர்க்க 700 மில்லியன் ரூபா வழங்க முன்வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நிகழ்வு ஒன்றின்போது இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், தன்னை அமைச்சர் பதவியில் இருந்து வெளியேற்றுவதற்காக பாதாள உலக பிரமுகர்கள் தனது சிரேஸ்ட அதிகாரிகளுக்கு இன்னும் பெரிய தொகை பணத்தை கொடுக்க அவர் தயாராக இருப்பதாக அமைச்சர் அலஸ் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, பாதாள உலகக் குழு உறுப்பினர்களுக்கு சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் உதவுவதும் குற்றச் செயல்கள் கணிசமான அளவு அதிகரிப்பதற்கு காரணமாக அமைவதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...