tamilni 22 scaled
இலங்கைசெய்திகள்

முன்பள்ளி ஆசிரியர்களின் நிரந்தர நியமனம்

Share

முன்பள்ளி ஆசிரியர்களின் நிரந்தர நியமனம்

முன்பள்ளி ஆசிரியர்கள் நிரந்தர நியமனம் தொடர்பில் நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கின்றனர் எனினும், அரசு இது தொடர்பில் கவனம் கொள்ளவில்லை என தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் ச.கீதன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சில முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அந்தந்த முன்பள்ளி நிர்வாகங்கள் சிறிதளவு ஊக்குவிப்பு பணத்தினை வழங்குகிறது. சில ஆசிரியர்களுக்கு கல்வி திணைக்களம் 6000 ரூபாய் ஊக்குவிப்பு பணத்தினை வழங்குகிறது.

இவ்வாறான சூழ்நிலையில், குறித்த ஆசிரியர்கள் சிறப்பான கல்வி வழங்குவதிலும் தமது பொருளாதாரத்தை கொண்டு செல்வதிலும் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றார்கள் என மேலும் தெரிவித்தார்.

முன்பள்ளி ஆசிரியர்கள் நீண்ட காலமாக இவ்வாறான நெருக்கடிகளில் இருந்து வருகின்றனர்.

அவர்கள் தமது பிரச்சினையை ஒரு அணியாக அல்லது குழுவாக பலரிடத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதிலும், ஜனாதிபதி தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் காலத்தில் அவர்களுக்கு தீர்வு வழங்குவதாக அரசியல் பிரமுகர்களினால் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டு குறித்த விடயம் தொடர்பில் பேசுவார்கள்.

ஆனால் குறித்த தேர்தல்கள் இடம்பெற்று தேர்தல் காலங்கள் முடிந்த பிறகும் அவர்களின் வேண்டுகோள் நிறைவேற்றப்படுவதில்லை. எனவே அரசாங்கம், அரசாங்கம் முன்பள்ளி ஆசிரியர்களின் விடையத்தில் கூடிய கவனம் எடுத்து நிரந்தர நியமனத்தை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...