tamilni 18 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பு நோக்கி வந்த ரயிலில் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம்

Share

கொழும்பு நோக்கி வந்த ரயிலில் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம்

தெமோதர ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் மீது மரம் ஒன்று வீழ்ந்ததன் காரணமாக நேற்று இரவு மலையகப் பாதையில் செல்லும் ரயில் சேவையில் இடையூறு ஏற்பட்டது.

எனினும் அப்போது பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் தெமோதர நிலையத்தை அடையவிருந்த நிலையில் ரயில் பரிசோதகரின் அவதானிப்பு காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

குறித்த மரம் முறிந்து விழும் நிலையில் இருந்ததைக் கண்ட வீதி பரிசோதகர், உடனடியாக இது தொடர்பில் தெமோதர ரயில் நிலைய அதிபருக்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய, உடனடியாகச் செயற்பட்ட ரயில் நிலைய அதிபர், ரயில் நிலையத்திற்குள் நுழைவதற்கு உரிய சமிக்ஞைகளை வழங்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். பின்னர், அந்த இடத்தைச் சரிபார்க்க சென்றபோது, ​​குறித்த மரம் முறிந்து விழுந்தது. இதனால், பெரும் விபத்து தவிர்க்க முடிந்தது.

பின்னர், ரயில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நிறுத்தப்பட்டு, ரயில் பாதை சீரமைக்கப்பட்ட பின்னர், ரயில் கொழும்புக்கு இயக்கப்பட்டது.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...