rtjy 12 scaled
இலங்கைசெய்திகள்

புதிய கடற்றொழில் சட்டம் தொடர்பில் டக்ளஸ் விளக்கம்

Share

புதிய கடற்றொழில் சட்டம் தொடர்பில் டக்ளஸ் விளக்கம்

புதிய கடற்தொழில் சட்டம் இன்னும் உருவாக்கப்படாத நிலையில் சிலர் கடற்தொழில் மக்களை குழப்பும் செயற்பாடுகளில் இறங்கியுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

புதிய கடத்தொழில் சட்ட முன்மொழிவு தொடர்பில் பாரம்பரிய கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் புதிய சட்டங்கள் இயற்றப்படுவதாக யாழில் மீனவ சங்கங்களுக்கிடையிலான கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்ட விடயம் தொடர்பில் அமைச்சரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடற்றொழிலாளர்களை பாதிக்கும் வகையில் எந்த விதமான சட்டங்களும் புதிதாக இயற்றப்படவில்லை. கடந்த காலங்களை இயற்றப்பட்ட சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக மீனவ மாவட்டங்களில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

ஆனால் யாழ்ப்பாணத்தில் சிலர் கடற்றொழிலாளர்களை பாதிக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படுவதாகவும் வெளிநாட்டு படகுகளை இலங்கை கடற்பரப்புக்குள் மீன் பிடிக்க அனுமதி வழங்கப்படப்போவதாக கூறியதாக அறிந்தேன்.

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டம் சகல மீன்பிடி மாவட்டங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும். அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதன் பின் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அது தொடர்பில் விவாதம் இடம்பெற்றதன் பின் திருத்த வேண்டிய விடயங்கள் இருந்தால் திருத்தப்பட்டு சட்டமாக்கப்படும்.

ஆனால் சிலர் அரச சார்பற்ற நிறுவனங்களிடம் இருந்து பணத்தை பெற்று மீனவ சங்கங்களுடன் கலந்து ரையாடல் என்ற போர்வையில் புதிய கடற்தொழில் சட்டம் தயாரிக்கப்பட்டு விட்டதாக மீனவ சங்கங்களை குழப்பி வருகின்றனர்.

ஆகவே பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கினங்க கடற் தொழில் மக்களை பாதிக்காத வகையில் புதிய சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...