இலங்கைசெய்திகள்

அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் அட்டூழியங்கள்

Share
rtjy 321 scaled
Share

அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் அட்டூழியங்கள்

அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் அண்மைக்காலமாக தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான கருத்துக்களை பொதுவெளியில் பேசி வருகின்றார்.

இந்த நிலையில், தமிழ் அரசியல்வாதிகள் உள்ளிட்ட சிலர் தொடர்பிலும் அவர் பல குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதுடன், தமிழர்களை சிங்களவர்கள் வெட்டுவார்கள் எனவும் நேரடியான அச்சுறுத்தலையும் அவர் விடுத்துள்ளார்.

அவரது இவ்வாறான வெறுக்கத்தக்க செயற்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரி பொலிஸ் மா அதிபருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அது தவிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், வேலுகுமார் உள்ளிட்ட ஒரு சில அரசியல்வாதிகளும், சமூக செயற்பாட்டாளர்களும் அம்பிட்டிய தேரரைக் கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதுடன், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அம்பிட்டிய தேரரின் செயற்பாடுகள் குறித்து கருத்து வெளியிட்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்,

அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிராக பல்வேறு தரப்பினராலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில் பொலிஸார் விசேட விசாரணைகளை முன்னெடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

நாட்டில் சட்டம், ஒழுங்கை நடைமுறைப்படுத்துவதற்கும், அமைதியைப் பேணி காப்பதற்காகவும் உரிய நடவடிக்கைகள் பாரபட்சமின்றி முன்னெடுக்கப்படும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

ஆகவே, முறைப்பாடுகள் தொடர்பில் தற்போது அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

அந்த வகையில் வீணான சந்தேகங்களை வெளியிட வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை என குறிப்பிட்டார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...