tamilni 352 scaled
இலங்கைசெய்திகள்

பலாலி ஜனாதிபதி மாளிகை விவகாரம்…! வடக்கு ஆளுநருக்கு சந்தேகம்

Share

பலாலி ஜனாதிபதி மாளிகை விவகாரம்…! வடக்கு ஆளுநருக்கு சந்தேகம்

வலி – வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை உள்ளடக்கிய தனியாருக்கு சொந்தமான காணிகளும் இருக்கிறதா என வடமாகாண ஆளுநர் பி.எச்.எம். சாள்ஸ் சந்தேகத்துடன் கேள்வி எழுப்பினார்.

இன்றைய தினம் (26.10.2023) வியாழக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கலந்துரையாடலின் போது இணை தலைவராக பங்கேற்ற வடமாகாண ஆளுநர் ஜனாதிபதி மாளிகை காணி விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்த்து குறித்த கேள்வி எழுப்பினார்.

ஜனாதிபதி மாளிகை காணி வெளிநாட்டு தனியார் ஒருவருக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டமை தொடர்பில் வாத பிரதிவாதங்கள் எழுந்தது.

நிகழ்வில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த காணியை எவ்வாறு அளவீடு செய்யாமல் வழங்க முடியும் எனக் கேள்வி எழுப்பியதுடன் காணியை இழந்த மக்களுக்கு இழப்பீடு வழங்கிய பின்னரே திட்டங்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது குறிப்பிட்ட ஆளுநர் குறித்த ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதி அரச காணி தானே அதை வழங்குவதற்கு தடை ஏதும் இருக்காது என தெரிவித்தார். இதன்போது குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள விடுவிக்கப்படாத பகுதியில் பலருடைய தனியார் காணிகள் இருப்பதாக தெரிவித்தார்.

குறுக்கீடு செய்த ஆளுநர் தெல்லிப்பழை பிரதேச செயலாளரை இது தொடர்பில் விளக்கப்படுத்துமாறு கூறினார். குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த தெல்லிப்பழைப் பிரதேச செயலாளர் ஜனாதிபதி மாளிகைக்காக 61 ஏக்கர் காணி கேட்கப்பட்ட நிலையில் சுமார் 29 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த ஜனாதிபதி மாளிகை தொடர்பான விடயங்கள் எமது பொறுப்பிலிருந்து நிலையில் பொது நிர்வாக அமைச்சின் அறிவுறுத்தலின் பிரகாரம் நகர அபி விருத்தி அதிகார சபையிடம் ஒப்படைத்து விட்டதாக தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
09 A corruption
செய்திகள்இலங்கை

பிடியாணை, போதை வாகனம் உட்பட ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் கைது!

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பிடியாணை மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக ஒரே நாளில்...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறையில் அதிர்ச்சிச் சம்பவம்:  மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்...

1795415 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை...

aJqHp SD
செய்திகள்உலகம்

இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11...