6 9 scaled
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Share

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

இந்த முறை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என நம்புவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிககும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அதிபர் தரம் IIIஇற்கான நியமனம் எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதிலும் உள்ள 4715 பேருக்கு இந்த நியமனம் வழங்கப்பட உள்ளது.

இந்த நிலையில், வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படலாம்.

தற்பொழுது நாட்டில் மின்சாரக் கட்டணம் அதிரிக்கப்படவில்லை. மாதம் ஒன்றுக்கான கட்டணம் 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் பிழையான ஒரு தகவல் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மின்சார கட்டணம் ஒரு போதும் அதிகரிக்கப்படவில்லை. 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட கட்டணம் ஒருபோதும் சாதாரண மக்களை பாதிக்காது.

நூற்றுக்கு 17 ரூபா 18 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது பொய்யான தகவல். அரசாங்கம் என்ற ரீதியில் , மின்சார சபை நட்டத்தில் இயங்குகிறது. ஆனால் அதனை பராமரிக்க அரசாங்கத்திற்கு முடியாது.

மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு பாரிய முதல் ஒன்று செலவாகும் பட்சத்தில் அதற்கான செலவினை மின்சார கட்டணத்தில் தான் அறவிட முடியும். சாதாரண மக்களுக்கு இந்த 30 ரூபா கட்டணம் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தாது என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 6 5
இலங்கைசெய்திகள்

பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவிப்பு!

கிராம சேவகர்களின் முறைகேடுகள் தொடர்பாக முறைப்பாடு செய்வதற்குப் புதிய நடைமுறை மற்றும் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகச்...

23 6463b66b7e2da
அரசியல்இலங்கைசெய்திகள்

அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் சஜித் பிரேமதாச போட்டி: சுஜீவ சேனசிங்க உத்தியோகபூர்வமாக உறுதி!

இலங்கையின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும் போட்டியிடுவார் என்பதை ஐக்கிய...

24 663887579e266
இந்தியாசெய்திகள்

மது அருந்தப் பணம் இல்லாததால் 2 மாதக் குழந்தையை ரூ. 2.4 லட்சத்திற்கு விற்பனை செய்த தாய்: ஐதராபாத்தில் அதிர்ச்சி!

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான தாய் ஒருவர், மது வாங்கப்...

IMG 20251217 WA0029 696x392 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஊழல் குற்றச்சாட்டு: கிளிநொச்சி மாசார் அ.த.க. பாடசாலை அதிபருக்கு எதிராகப் பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் போராட்டம்!

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி மாசார் அ.த.க. பாடசாலையின் அதிபர் த.ஜெபதாஸ் மேற்கொண்டு வரும் நிதி முறைகேடுகள் மற்றும்...