tamilni 277 scaled
இலங்கைசெய்திகள்

மீரிபெத்த பகுதியில் மண் சரிவு அபாயம்

Share

மீரிபெத்த பகுதியில் மண் சரிவு அபாயம்

பதுளை கொஸ்லந்த மீரிபெத்த பகுதியில் மீண்டும் மண் சரிவு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் கே.ஏ..ஜே. பிரியங்கணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கட்டிட ஆய்வு நிறுவனத்தினால் இது குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து குறித்த பகுதியில் தோட்ட குடியிருப்புகளில் வசித்து வந்த 27 குடும்பங்கள் அந்த பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ஹப்புத்தளை மற்றும் பெரகல பகுதிகளிலும் மண் சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததுடன் மண் சரிவு காரணமாக பதுளை கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்கு செல்வதனை தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.

கடந்த 2014ம் ஆண்டில் மீரிபெத்த பகுதியில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக 14 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
26 696b34410ecde
இலங்கைசெய்திகள்

துபாய் இஷார வலையமைப்பின் 3 முக்கிய ஏஜெண்டுகள் கைது: கம்பளையில் 20 வயது இளைஞர்கள் போதைப்பொருளுடன் சிக்கினர்!

துபாயில் இருந்து இலங்கையின் போதைப்பொருள் வலையமைப்பை இயக்கி வரும் ‘துபாய் இஷார’ என்ற முக்கிய கடத்தல்காரருக்குச்...

images 13 2
செய்திகள்இலங்கை

டித்வா புயல் நிவாரணம்: 3,000 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கல் – வாடகை வீடுகளுக்கும் அரசாங்கம் நிதி உதவி!

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கல்வி உதவிக் கொடுப்பனவுகள் மற்றும் வீடுகளைச் சீரமைப்பதற்கான மானியங்கள்...

c1 657340 150817014214
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவில் மாயமான அரசு விமானம்: 11 பேருடன் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியதா?

இந்தோனேசியாவின் கடல்சார் விவகாரம் மற்றும் மீன்பிடி அமைச்சிற்குச் சொந்தமான ATR 42-500 ரக விமானம் ஒன்று,...

articles2FDqSEA1koeExt2vjgQ8N0
இலங்கைஅரசியல்செய்திகள்

இனவாதத்தை தூண்ட இடமளிக்க மாட்டோம்: சாவகச்சேரி வீட்டுத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி அநுர உறுதி!

நாட்டில் தொல்பொருள் அல்லது மதத் தலங்களை முன்னிறுத்தி மீண்டும் இனவாத முரண்பாடுகளைத் தூண்டிவிட முயற்சிப்பவர்களுக்கு ஒருபோதும்...