rtjy 185 scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ்.போதனா வைத்தியசாலையில் நடந்த மனிதாபிமானமற்ற செயல்: பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு நடவடிக்கை

Share

யாழ்.போதனா வைத்தியசாலையில் நடந்த மனிதாபிமானமற்ற செயல்: பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு நடவடிக்கை

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வந்த நபர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொண்ட இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் இன்றிலிருந்து கடமை நீக்கம் செய்யப்படுவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண போதன வைத்தியசாலை நுழைவாயிலில் வைத்தியசாலைக்கு வந்த நபர் ஒருவர் பாதுகாப்பு ஊழியர்களால் தாக்கப்பட்ட சம்பவமானது கண்டிக்கப்பட வேண்டியது.

இந்த விடயத்தை நான் மிகவும் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளதோடு குறித்த பாதுகாப்பு கடமைகள் ஈடுபடும் தனியார் நிறுவனத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளேன்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு காவலாளிகளையும் இன்றிலிருந்து வைத்தியசாலை பாதுகாப்பு கடமைக்கு அனுப்ப வேண்டாம் எனவும் அவர்களுக்கு எச்சரித்துள்ளேன்.

எனினும் இவ்வாறான சம்பவங்களை இனி மேலும் ஏற்றுக்கொள்ள முடியாது, அதாவது பொதுமக்கள் வைத்தியசாலைக்கு சுதந்திரமாக வந்து தமது மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனவே இவ்வாறான ஒரு சில சம்பவங்கள் மூலம் அவை மழுங்கடிக்கப்படக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலைக்கு மதுபோதையில் வந்த நபர் அநாகரிகமாக நடந்து கொண்டு, பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு தாக்குதலை மேற்கொண்டு வைத்தியசாலைக்குள் செல்ல முற்பட்ட போதே பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், அந்நபர் மீது தாக்குதலை மேற்கொண்டனர் என பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
images 11
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம்: எலிக்காய்ச்சல் காரணமாக 17 வயதுச் சிறுவன் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – அல்வாய் கிழக்கு, அல்வாய் பகுதியினைச் சேர்ந்த 17 வயதுச் சிறுவன் ஒருவன் எலிக்காய்ச்சல்...

images 10
செய்திகள்இலங்கை

அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 மில்லியன் இழப்பீடு: ஜனாதிபதி பணிப்புரை!

அதிக மழையுடன் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு...

PowerCut 1200px 22 11 28 1000x600 1
செய்திகள்இலங்கை

மோசமான காலநிலை: மின் விநியோக மார்க்கம் பாதிப்பால் பல பகுதிகளில் மின்சாரம் தடை!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாகப் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை...

25 67efbc96a90dc
செய்திகள்இலங்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (நவம்பர் 27) காலை கொழும்பில் உள்ள ஒரு தனியார்...