tamilni 174 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுவது சந்தேகத்துக்குரியது

Share

ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுவது சந்தேகத்துக்குரியது

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றை பிற்போடுவது கடினமானதல்ல என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்,பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறுவது சந்தேகத்துக்குரியது எனவும், தேர்தலுக்காகவும் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை தோற்றம் பெற்றுள்ளது என்றும் கூறியுள்ளார்.

பொரளையில் உள்ள இலங்கை கம்யூனிச கட்சி காரியாலயத்தில் நேற்று (12.10.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க உலகத்தை வலம் வருகிறார்.

ஆனால் பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வு எட்டப்படவில்லை.பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மென்மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் அரசாங்கம் தீர்மானங்களை முன்னெடுக்கிறது.

சர்வதேச நாணய நிபந்தனைக்கு அமைய வரி உட்பட அத்தியாவசிய சேவை கட்டணங்கள் உயர்வடைந்துள்ளன. மின்கட்டணம் முறையற்ற வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மின்கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் யோசனை முன்வைத்துள்ளது.

மின்சார சபை எதிர்கொள்ளும் நட்டத்தை முகாமைத்துவம் செய்துக்கொள்வதற்காகவே மின்கட்டணம் முறையற்ற வகையில் அதிகரிக்கப்படுகிறது.மின்சார சபையின் ஊழல் மற்றும் வீண் செலவுகளை கட்டுப்படுத்தினால் முறையற்ற மின்கட்டண அதிகரிப்பை தடுக்கலாம்.

தேர்தல் ஊடாகவே ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முடியும். இதனால் தான் காலத்துக்கு காலம் தேர்தல் நடத்தப்படுகிறது.

நாட்டு மக்கள் போராட்டத்தின் ஊடாக ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.

அதுவும் தற்போது ஸ்திரமற்றதாக காணப்படுகிறது.மக்களின் தேர்தல் உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தேர்தல் முறைமையை திருத்தியமைக்கும் வகையில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தேர்தலை பிற்போடுவதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திறமையானவர். பெண் பிரநிதித்துவத்தை அதிகரிப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாகாண சபைத் தேர்தல் முறைமையை திருத்தம் செய்தார்.

இறுதியில் மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டது. உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர் எண்ணிக்கையை வரையறை செய்வதாக குறிப்பிட்டுக் கொண்டு எல்லை நிர்ணயம் புதிதாக வகுக்கப்பட்டது.

தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் தேர்தல் முறைமையை திருத்தம் செய்யும் வகையில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தல்,உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றை பிற்போடுவது கடினமானதல்ல.

ஆகவே எதிர்வரும் ஆண்டு ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறுவது சந்தேகத்துக்குரியதே.

தேர்தலுக்காகவும் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை தோற்றம் பெற்றுள்ளது. பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்களின் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எமக்கு எதிராக பொதுஜன பெரமுனவினால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது.” என கூறியள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...