tamilni 171 scaled
இலங்கைசெய்திகள்

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் எச்சரிக்கை

Share

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் எச்சரிக்கை

சுவாசக்குழாய் தொற்று உள்ள சிறு குழந்தைகளுக்கு கண் நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் கண் நோய்களுக்கான விசேட வைத்திய நிபுணர் ஹிரண்ய அபேசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்தில் கொழும்பு பிரதேசத்தில் உள்ள பல பாடசாலைகளில் குழந்தைகளுக்கு கண் நோய் பரவியது.

உலக பார்வை தினத்தை முன்னிட்டு நேற்று கண் வைத்தியசாலையில் நடைபெற்ற மாநாட்டில் வைத்தியரிடம் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பொதுவாக சிறு குழந்தைகளுக்கு மூச்சுக்குழாய் தொற்று காரணமாக கண் நோய்கள் பரவுவதாகவும், மூன்று நாட்களுக்கு மேல் இந்நோய் நீடித்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கண்கள் சிவப்பாக இருந்தால், கண்களில் இருந்து நீர் வெளியேற்றம் அதிகமாக இருந்தால், பெற்றோர்கள் கவனம் செலுத்தி, பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாமல், வீட்டிலேயே தங்க வைத்து, மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலையொன்றில் இவ்வாறான அறிகுறிகளுடன் கூடிய மாணவர்கள் இருந்தால் உடனடியாக நோயுற்ற மாணவர்களை ஏனையவர்களிடம் இருந்து பிரித்து வைப்பது மிகவும் அவசியமானது என விசேட வைத்தியர் ஹிரண்ய அபேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த கண் நோய் குறித்து பெற்றோர்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Share
தொடர்புடையது
codf 1671799699
உலகம்செய்திகள்

16 ஆண்டுகால திருமண பந்தம் முறிவு: முடி கொட்டியதால் மனைவியை கைவிட்ட கணவன் – சீனாவில் ஒரு சோகம்!

சீனாவில் 16 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த தனது மனைவிக்கு ஏற்பட்ட சரும நோயால் முடி கொட்டியதைக்...

tjv16cjg mohsin naqvi shahbaz sharif 625x300 26 January 26
செய்திகள்விளையாட்டு

T20 உலகக்கிண்ணம் 2026: பாகிஸ்தான் பங்கேற்பதில் சிக்கல்? பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் இன்று அவசரச் சந்திப்பு!

இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது...

images 9 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புற்றுநோய் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு: சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்து குறித்து CID-யில் முறைப்பாடு!

நாட்டின் புற்றுநோய் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் வெளிச்சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்துகள் தொடர்பாக...

DxCjISGeXs
இந்தியாசெய்திகள்

ஆசியாவில் நிபா வைரஸ் அச்சம்: முக்கிய வானூர்தி நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம் – 75% உயிரிழப்பு விகிதம் கொண்ட உயிர்கொல்லி!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா (Nipah) வைரஸ் தொற்றுப் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து,...