tamilni 170 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பில் தீவிரமாக பரவும் கண் நோய்

Share

கொழும்பில் தீவிரமாக பரவும் கண் நோய்

கொழும்பில் தற்போது தீவிரமாக பரவி வரும் கண் நோய் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், ஐந்து நாட்களுக்கு மேல் அறிகுறிகள் நீடிக்குமாயின் உடனடியாக வைத்தியசாலையை நாடுவது அவசியமானது எனவும் சுகாதாரப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

இந்த கண் நோய் தொடர்பில் சுகாதாரத் துறை தொடர்ந்தும் அவதானம் செலுத்தி வருகின்றது என கொழும்பு சிரேஷ்ட சுகாதார வைத்திய அதிகாரி ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

மேலும், கொழும்பு மேற்கு, மத்திய, வடக்கு பகுதிகளிலும் மற்றும் பொரளை ஆகிய பகுதிகளிலும் உள்ள பாடசாலை மாணவர்கள் மத்தியில் இந்த கண் நோய் தீவிரமாக பரவி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும், இந்த கண் நோய் தொடர்பில் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என வைத்திய அதிகாரி ருவான் விஜேமுனி மேலும் அறிவுறுத்தினார்.

இந்த நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு கண்கள் சிவத்தல், தொடர்ந்தும் கண்ணீர் வெளியேறுதல், கண்களில் அரிப்பு ஏற்படுதல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர்களிடத்தில், 5 நாட்களுக்கு மேலாக இவ்வாறான அறிகுறிகள் நீடிக்குமாயின், உடனடியாக அவர்களை வைத்தியர் ஒருவரிடம் அழைத்துச் செல்லுமாறு பெற்றோர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கண்நோய் தொற்றை குறைப்பதற்காக அடிக்கடி கைகளைச் சுத்தம் செய்தல், கண்களைத் தொடுவதை தவிர்ப்பது உள்ளிட்ட சுகாதார ஆலோசனைகளை உரிய வகையில் பின்பற்றுமாறும் வைத்திய அதிகாரி ருவான் விஜேமுனி மேலும் குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...