rtjy 147 scaled
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி மோசடி செய்த தம்பதியினர்

Share

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி மோசடி செய்த தம்பதியினர்

ருமேனியா நாட்டில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி புத்தளம் மாவட்டம் முழுவதும் சுமார் 300 இலட்சம் ரூபாவை ஏமாற்றிய நுரைச்சோலை மற்றும் மாதம்பையில் வசிக்கும் தம்பதியினர் இருவரும் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடுவளை, ஹலவத்தல, மாதம்பே, வென்னப்புவ, கட்டுனேரிய, மாரவில, மாதம்பே, கருக்குவ ஆகிய பிரதேசங்களில் தாம் வாழ்ந்த வாடகை வீட்டில் இருந்து 25 நபர்களிடத்தில் இலட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை இலங்கை முழுவதிலும் உள்ள 16 பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும், குறித்த தம்பதியினரை கைது செய்யமுடியவில்லை என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட இந்த இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட ரசீதுகள் மற்றும் காசோலைகளின் நகல்கள் பொலிஸாரிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுமேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...