rtjy 147 scaled
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி மோசடி செய்த தம்பதியினர்

Share

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி மோசடி செய்த தம்பதியினர்

ருமேனியா நாட்டில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி புத்தளம் மாவட்டம் முழுவதும் சுமார் 300 இலட்சம் ரூபாவை ஏமாற்றிய நுரைச்சோலை மற்றும் மாதம்பையில் வசிக்கும் தம்பதியினர் இருவரும் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடுவளை, ஹலவத்தல, மாதம்பே, வென்னப்புவ, கட்டுனேரிய, மாரவில, மாதம்பே, கருக்குவ ஆகிய பிரதேசங்களில் தாம் வாழ்ந்த வாடகை வீட்டில் இருந்து 25 நபர்களிடத்தில் இலட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை இலங்கை முழுவதிலும் உள்ள 16 பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும், குறித்த தம்பதியினரை கைது செய்யமுடியவில்லை என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட இந்த இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட ரசீதுகள் மற்றும் காசோலைகளின் நகல்கள் பொலிஸாரிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுமேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...