tamilni 78 scaled
இலங்கைசெய்திகள்

முக்கிய அமைச்சுக்களை குறி வைக்கும் பசில்

Share

முக்கிய அமைச்சுக்களை குறி வைக்கும் பசில்

சமகால அரசாங்கத்தில் முக்கிய அமைச்சுக்களை பெற்றுக்கொள்ள பொதுஜன பெரமுன கட்சியினர் முயற்சித்து வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் தமது கோரிக்கையை முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து பொதுஜன பெரமுன கட்சியின் மாவட்டத் தலைவர்கள் குழுவொன்று செயற்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் இது தொடர்பில் ஜனாதிபதியுடன் குழுக்கூட்டமொன்றுக்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

அதற்கமைய, அனுராதபுரம், களுத்துறை, கண்டி, நுவரெலியா, அம்பாறை, குருநாகல் ஆகிய மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்ட தலைவர்கள் குழுவொன்று இந்த சந்திப்பிற்கு தயாராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னதாக அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதே பொதுஜன பெரமுன கட்சியின் எதிர்பார்ப்பாக உள்ளதென தெரியவந்துள்ளது.

இதனை நடைமுறைப்படுத்தாவிட்டால் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படும் என குறிப்பிடப்படுகின்றது.

Share
தொடர்புடையது
f9249630 b942 11f0 94ea 0d369b0104d5.jpg
செய்திகள்இந்தியா

விண்வெளித் துறையில் இந்தியா சாதனை: ‘பாகுபலி’ விண்கலம் மூலம் அமெரிக்க செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) வலிமைமிக்க விண்கலமான எல்.வி.எம்-3 (LVM3-M6), இன்று காலை 8:55...

images 4 6
இலங்கைஅரசியல்செய்திகள்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 25,000 கிலோ கிராம் போஷணைப் பொருட்களை வழங்கியது யுனிசெப்!

டிட்வா (Ditwa) சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மந்தபோஷணை...

images 3 7
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர்களின் பூர்விகக் காணிகளை ஆக்கிரமிக்காதீர் – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் காட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதிகளில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்விகக் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு...

chambikka
செய்திகள்அரசியல்இலங்கை

யூதர்களை இலக்கு வைத்து இலங்கையிலும் தாக்குதல் நடக்க வாய்ப்பு – பாட்டாலி சம்பிக ரணவக்க எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவில் யூதர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலைப் போன்ற சம்பவங்கள் இலங்கையிலும் இடம்பெறக்கூடும் என முன்னாள் அமைச்சர்...