rtjy 121 scaled
இலங்கைசெய்திகள்

சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனை

Share

சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனை

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் அணுகலைப் பாதுகாக்கும் கொள்கைகள் மற்றும் விதிகளை ஸ்தாபிக்குமாறு சர்வதேச நாணய நிதியம், இலங்கை அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

தனியுரிமை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு வரைவுச் சட்டங்களைச் சுற்றி கடுமையான எதிர்ப்புகள் உள்ளன.

இந்தநிலையில் இந்த விடயங்களில் சரியான சமநிலை நிரூபிக்கப்படாவிட்டால், வெளிப்படைத்தன்மைக்கு குறிப்பிடத்தக்க ஆபத்து ஏற்படும் என்றும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் 20 முதல் 31 வரையிலான மதிப்பீட்டுப் பணியைத் தொடர்ந்து செப்டம்பர் 30 அன்று வெளியிடப்பட்ட ஆளுகை கண்டறியும் அறிக்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தகவல் அறியும் குழுவின் ஆணையை நிறைவேற்றுவது, நிர்வாகத்திற்கு இன்றியமையாதது என்றும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, தகவல் வெளியிடுபவர்களைப் பாதுகாக்க தெளிவான நடைமுறை விதிகளை நிறுவ வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
02 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீதுவையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை: 7 பேர் கைது

சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீர்கொழும்பு வீதிப் பகுதியில், மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நீண்டகாலமாக இயங்கி...

01 10
செய்திகள்உலகம்

ஈரான் போர்: அமெரிக்க இராணுவத்தினர் காயமடைந்தது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியீடு

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்தி வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’...

30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...