இலங்கைசெய்திகள்

சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனை

Share
rtjy 121 scaled
Share

சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனை

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் அணுகலைப் பாதுகாக்கும் கொள்கைகள் மற்றும் விதிகளை ஸ்தாபிக்குமாறு சர்வதேச நாணய நிதியம், இலங்கை அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

தனியுரிமை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு வரைவுச் சட்டங்களைச் சுற்றி கடுமையான எதிர்ப்புகள் உள்ளன.

இந்தநிலையில் இந்த விடயங்களில் சரியான சமநிலை நிரூபிக்கப்படாவிட்டால், வெளிப்படைத்தன்மைக்கு குறிப்பிடத்தக்க ஆபத்து ஏற்படும் என்றும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் 20 முதல் 31 வரையிலான மதிப்பீட்டுப் பணியைத் தொடர்ந்து செப்டம்பர் 30 அன்று வெளியிடப்பட்ட ஆளுகை கண்டறியும் அறிக்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தகவல் அறியும் குழுவின் ஆணையை நிறைவேற்றுவது, நிர்வாகத்திற்கு இன்றியமையாதது என்றும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, தகவல் வெளியிடுபவர்களைப் பாதுகாக்க தெளிவான நடைமுறை விதிகளை நிறுவ வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...