rtjy 115 scaled
இலங்கைசெய்திகள்

பயணப் பாதையை மாற்றிய ரணில்

Share

பயணப் பாதையை மாற்றிய ரணில்

மட்டக்களப்பு நிகழ்வுக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கால்நடை பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு அஞ்சி பிரதான வீதியுடாக செல்வதை தவிர்த்து ஊர்வீதிகளுக்குள்ளால் பயணித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மேய்ச்சல் தரை காணிகள் பெரும்பான்மை சிங்களவர்களினால் அபகரிக்கப்படுவதற்கு எதிராக கடந்த 23நாட்களாக கால்நடை பண்ணையாளர்கள் போராடிவருகின்றனர்.

இந்த நிலையில் மட்டக்களப்புக்கு வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க நேற்றும் இன்றும் மட்டக்களப்பு பாசிக்குடாவில் தங்கியிருந்து இரண்டு பாடசாலை நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.

அந்த வகையில் நேற்றைய தினம்(07.10.2023) மட்டக்களப்பு நகரில் உள்ள பாடசாலையொன்றுக்கு ஜனாதிபதி வருகை தந்திருந்தார்.

இந்நிலையில், அந்த வீதியால் பெருமளவான பொலிஸார் போராட்டம் நடைபெறும் இடங்களில் குவிக்கப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

பல பொலிஸ் நிலையங்களிலிருந்து பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பெருமளவான பொலிஸ் அதிகாரிகளும் வருகைதந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது அடிக்கடி ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினரும் வருகைதந்து போராட்டம் நடைபெறும் இடத்தினை பார்வையிட்டுச்சென்றதுடன் பொலிஸ் அதிகாரிகளுடனும் கலந்துரையாடியுள்ளனர்.

இதேவேளை திடீரென போராட்டம் நடைபெறும் பகுதிக்கு சென்ற பொலிஸார் போராட்டத்தின் முன்பாக வரிசையில் நின்று பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ளனர்.

இதன்போது உடனடியாக பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸாரை அங்கிருந்துசெல்லுமாறு உயரதிகாரிகளினால் பணிக்கப்பட்ட நிலையில் ஜனாதிபதி உள்வீதியினால் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு சென்றதாக கூறப்பட்டுள்ளது.

“ஒரு நாட்டின் மக்கள் தமது பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி போராட்டம் முன்னெடுக்கும் நிலையில் அவர்களின் பிரச்சினைகளை தீர்க்கமுடியாமல் செல்லும் ஜனாதிபதியினால் நாட்டின் பிரச்சினையை எவ்வாறு தீர்க்க முடியும்” என போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

Share
தொடர்புடையது
images 5 6
செய்திகள்இலங்கை

வங்காள விரிகுடாவில் புதிய குறைந்த அழுத்தப் பகுதி:  தாழமுக்கம் உருவாக வாய்ப்பு 

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் எதிர்வரும் நவம்பர் 22ஆம் திகதியளவில் ஒரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம்...

national hospital
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி தேசிய வைத்தியசாலையில் சாதனை: குறுகிய காலத்தில் நடமாட வைக்கும் முழங்கால் மாற்றுச் சத்திரசிகிச்சை – தாய்லாந்து நிபுணர்கள் உதவி!

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதைக் குறிக்கும் வகையில், கண்டி...

images 4 7
உலகம்இலங்கை

பிரித்தானியாவை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை முந்தைய தரவுகளை விட மூன்று மடங்கு அதிகரிப்பு!

பிரித்தானியாவை விட்டு நிரந்தரமாக வெளியேறிய பிரித்தானியர்களின் எண்ணிக்கை முன்னதாக அறிவிக்கப்பட்ட தரவுகளைக் காட்டிலும் மிகவும் அதிகம்...

5dbc2f30 18e7 11ee 8228 794cf17b91f4.jpg
செய்திகள்உலகம்

தமிழகத்தில் அதிர்ச்சி: தாயைத் தாக்கி இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய வழக்கில் 5 பேர் கைது!

இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய குற்றச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத்...