இலங்கைசெய்திகள்

சகோதரியின் வீட்டிற்கு சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி

rtjy 128 scaled
Share

சகோதரியின் வீட்டிற்கு சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி

ஊவா பரணகம பிரதேசத்தில் தனது சகோதரியின் வீட்டிற்கு வந்திருந்த 26 வயதுடைய இளம்பெண் ஒருவர் அந்த வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

வெலிமட மிராஹவத்த பிரதேசத்தைச் சேர்ந்த யுவதியொருவர் ஊவா பரணகம – பல்லேவெல பிரதேசத்தில் வசிக்கும் தனது மூத்த சகோதரியின் வீட்டிற்குச் சென்ற போதே இந்தச் சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.

நேற்றிரவு வீட்டின் அறையொன்றில் உறங்கச் சென்றிருந்த நிலையில் இன்று காலை அப்பகுதியினர் நடத்திய விசாரணையில் பெண் வீட்டில் இல்லை எனத் தெரியவந்துள்ளது.

ஊவா பரணகம பிரதேசத்திலுள்ள தோட்டமொன்றில் பெண் ஒருவர் வீழ்ந்து கிடப்பதை பிரதேசவாசிகள் கண்டதாகவும் இது தொடர்பில் ஊவா பரணகம பொலிஸாருக்கு அறிவித்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இது தொடர்பான தகவல்களை விசாரித்ததில் அவர் பல்லேவெல பகுதியை சேர்ந்த காணாமல் போன இளம்பெண் என தெரியவந்துள்ளது.

இளம் பெண் கண்டுபிடிக்கப்பட்டபோது, ​​​​அவரது கீழ் உடல் நிர்வாணமாக இருந்தது மற்றும் அவர் அரை மயக்கத்தில் இருந்தார், பின்னர் அவர் தனக்கு நடந்தது எதுவும் நினைவில் இல்லை என்று கூறினார்.

சம்பவத்தை எதிர்கொண்ட இளம்பெண் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மேலும், அவர் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் ஊசி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...