rtjy 81 scaled
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் பொது முடக்கம்

Share

வடக்கு – கிழக்கில் பொது முடக்கம்

முல்லைத்தீவு நீதிபதி ரி. சரவணராஜாவின் பதவி விலகலுக்கு நீதி கோரி எதிர்வரும் வாரம் வடக்கு கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய வகையில் பொது முடக்கம் முன்னெடுக்கவுள்ளதாக 7 தமிழ் தேசிய கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.

யாழ்ப்பாணத்தில் 7 தமிழ் தேசிய கட்சிகளுக்கு இடையில் இன்று(06.10.2023) இடம்பெற்ற கூட்டத்தில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடிய பின் அடுத்த வாரம் பொது முடக்க நடவடிக்கை தொடர்பில் முடிவு எடுக்கப்படும் எனவும் பொது முடக்கத்திற்கான திகதி எதிர்வரும் சில தினங்களுக்குள் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான விக்னேஸ்வரன், சித்தார்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிறீகாந்தா வடமாகணசபை முன்னாள் உறுப்பினர் கஜதீபன், மற்றும் தியாகராஜா நிரோஷ், மாவை சேனாதிராஜா கலையமுதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Share
தொடர்புடையது
11 1
செய்திகள்உலகம்

மார்ச் 3-இல் தோன்றும் ‘இரத்த நிலவு’: 58 நிமிடங்கள் நீடிக்கும் 2026-இன் முதல் சந்திர கிரகணம்!

2026 ஆம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் எதிர்வரும் மார்ச் 3-ஆம் திகதி நிகழவுள்ளதாக சர்வதேச...

goldsteal cleanup
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலவாக்கலையில் நூதனத் திருட்டு – சிசிடிவி காட்சி வெளியீடு!

தலவாக்கலை பிரதான நகரில் அமைந்துள்ள பிரபல நகைக்கடை ஒன்றில், நேற்று (24) பகல் வேளையில் வாடிக்கையாளர்...

10 1
செய்திகள்உலகம்

கால்பந்து மைதானம் அளவுள்ள பிரம்மாண்ட பவளம்! கிரேட் பேரியர் ரீஃபில் தாய்-மகள் குழுவின் வரலாற்றுச் சாதனை.

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில், இதுவரை ஆவணப்படுத்தப்பட்டவற்றிலேயே உலகின் மிகப்பெரிய பவளக் காலனியை...

09 1
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் பின்னணி: முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே அதிரடி கைது – 72 மணிநேரத் தடுப்புக் காவல்!

இலங்கை வரலாற்றில் மிகக் கொடூரமான தாக்குதலான 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில், முன்னாள்...