rtjy 97 scaled
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு

Share

ஜனாதிபதி பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு

2025 ஆண்டு முதல் கல்விப் பொதுதராதர உயர்தர மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளை உரிய நேரத்தில் நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் அரசியல் அதிகாரங்களுக்கோ அல்லது வேறு எவருக்கோ பரீட்சை திகதியை சட்டத்தின் மூலம் மாற்ற முடியாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார்.

மேலும் தெரியவருகையில், இந்த ஆண்டும் பரீட்சைகள் தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் நடத்தப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

2025 ஆம் ஆண்டு முதல் பரீட்சைகளை நடாத்துவதற்கு பிள்ளைகளுக்கு சுமை ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சைகளை உரிய நேரத்தில் நடாத்துவதற்கு நாடாளுமன்ற சட்டத்தின் ஊடாக ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கல்வி அமைச்சருக்கு வழங்கிய பணிப்புரையிலும் காணப்படுகின்றது.

அரசியல் அதிகாரங்களுக்கோ அல்லது வேறு எவருக்கோ பரீட்சை திகதியை சட்டத்தின் மூலம் மாற்ற முடியாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் பரீட்சைகள் பிற்போடப்படுவதனால் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் புலமைப்பரிசில்கள் பெறுவது, வயது வரம்பைத் தாண்டிச் செல்வது போன்ற பல பாதகமான விளைவுகளை மாணவர்கள் சந்திக்க நேரிடும் என அண்மையில் கல்வி நிபுணர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
1529934317 gun gunshot 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பத்தரமுல்லையில் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு! – ஜீப் வாகனத்தில் இருந்த தம்பதியினர் மர்மமான முறையில் சுட்டுக்கொலை!

கொழும்பு – பத்தரமுல்லை, அக்குரேகொட பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் தம்பதியினர்...

25 679d968d808df
இலங்கைசெய்திகள்

18 ஆண்டுகால நீதிப் போராட்டம்: வஸ்கடுவ கொலை வழக்கில் மூவருக்கு மரண தண்டனை!

குடா வஸ்கடுவ பகுதியில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற நபர் ஒருவரின் படுகொலை தொடர்பான வழக்கில்,...

26 69858a214d488
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இரசாயனப் பொருளை சுவாசித்த 19 பேர் பாதிப்பு! – மொரட்டுவை பாடசாலை மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

மொரட்டுவை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வக சோதனையின் போது, வெளியேறிய இரசாயனப்...

1770972444 seine 6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் 9-வது நாளாக மீனவர் போராட்டம்! – தீர்வு காண ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு!

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக, கொளுத்தும் வெயிலையும் பாரிய மழையையும் பொருட்படுத்தாது மீனவர்கள் முன்னெடுத்து...