rtjy 93 scaled
இலங்கைசெய்திகள்

நீதிபதிகள் தொடர்பில் சுமந்திரன் தெரிவித்த கருத்தால் புதிய சர்ச்சை

Share

நீதிபதிகள் தொடர்பில் சுமந்திரன் தெரிவித்த கருத்தால் புதிய சர்ச்சை

அசாத் மௌலானா கூறிய சில கருத்துக்களை மையப்படுத்தி நீதியரசர் ஒருவரை மிக மோசமான கருத்துக்களை கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் விமர்சித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று முன் தினம்(05.10.2023) இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

”குறித்த நீதியரசர் பிள்ளையானின் வழக்கில் நேரடியாக தலையிட்டு தீர்ப்பு வழங்கியதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான விடயம். அந்த நீதியரசர் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக இருந்தவேளை பிள்ளையான் எந்த ஒரு சந்தர்பத்திலும் மனுதாக்கல் செய்யவில்லை.

மேலும் தான் நீதிமன்றத்திற்கு செல்லும் முன் நீதிமன்ற ஆசனத்தில் உள்ள நீதிபதியை பார்த்துதான் வழக்குகளை தயார் செய்வேன் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் இலங்கையின் சுயாதீன நீதித்துறை தொடர்பில் சுமந்திரன் மிக மோசமான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...