rtjy 93 scaled
இலங்கைசெய்திகள்

நீதிபதிகள் தொடர்பில் சுமந்திரன் தெரிவித்த கருத்தால் புதிய சர்ச்சை

Share

நீதிபதிகள் தொடர்பில் சுமந்திரன் தெரிவித்த கருத்தால் புதிய சர்ச்சை

அசாத் மௌலானா கூறிய சில கருத்துக்களை மையப்படுத்தி நீதியரசர் ஒருவரை மிக மோசமான கருத்துக்களை கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் விமர்சித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று முன் தினம்(05.10.2023) இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

”குறித்த நீதியரசர் பிள்ளையானின் வழக்கில் நேரடியாக தலையிட்டு தீர்ப்பு வழங்கியதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான விடயம். அந்த நீதியரசர் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக இருந்தவேளை பிள்ளையான் எந்த ஒரு சந்தர்பத்திலும் மனுதாக்கல் செய்யவில்லை.

மேலும் தான் நீதிமன்றத்திற்கு செல்லும் முன் நீதிமன்ற ஆசனத்தில் உள்ள நீதிபதியை பார்த்துதான் வழக்குகளை தயார் செய்வேன் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் இலங்கையின் சுயாதீன நீதித்துறை தொடர்பில் சுமந்திரன் மிக மோசமான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...