rtjy 61 scaled
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் பயணிகள் பாதிப்பு

Share

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் பயணிகள் பாதிப்பு

தாய்லாந்தின் பாங்கொக் நோக்கிப் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவையைச் சேர்ந்த யு.எல். 403 என்ற விமானம் ஏறக்குறைய 10 மணி நேரம் தாமதமானதற்கு பயணிகளை ஏற்றிச் செல்ல விமானம் இல்லாததே காரணம் என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

குறித்த விமானம் நேற்று இரவு 11.37 மணிக்கு புறப்பட்டதாக கூறப்படுகிறது.

முந்தைய நாள் விமானம் தாமதமானதால் பயணிக்க முடியாமல் தவித்த பயணிகள் குழுவும் அந்த விமானத்தில் பயணித்துள்ளனர்.

இந்த விமானம் அதிகாலை 1.10 மணிக்கு புறப்பட்டு 8.30 மணிக்கு பாங்கொக்கை சென்றடைந்து பின்னர் 10.40 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு திரும்பும்.

இரண்டு விமான நிலையங்களிலும் விமானம் புறப்படாமல் இருந்ததால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

பாங்கொக் விமான நிலையத்தில் பயணித்தவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடியும் அடங்குவதாக விமான நிலைய வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...