rtjy 61 scaled
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் பயணிகள் பாதிப்பு

Share

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் பயணிகள் பாதிப்பு

தாய்லாந்தின் பாங்கொக் நோக்கிப் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவையைச் சேர்ந்த யு.எல். 403 என்ற விமானம் ஏறக்குறைய 10 மணி நேரம் தாமதமானதற்கு பயணிகளை ஏற்றிச் செல்ல விமானம் இல்லாததே காரணம் என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

குறித்த விமானம் நேற்று இரவு 11.37 மணிக்கு புறப்பட்டதாக கூறப்படுகிறது.

முந்தைய நாள் விமானம் தாமதமானதால் பயணிக்க முடியாமல் தவித்த பயணிகள் குழுவும் அந்த விமானத்தில் பயணித்துள்ளனர்.

இந்த விமானம் அதிகாலை 1.10 மணிக்கு புறப்பட்டு 8.30 மணிக்கு பாங்கொக்கை சென்றடைந்து பின்னர் 10.40 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு திரும்பும்.

இரண்டு விமான நிலையங்களிலும் விமானம் புறப்படாமல் இருந்ததால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

பாங்கொக் விமான நிலையத்தில் பயணித்தவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடியும் அடங்குவதாக விமான நிலைய வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

Share
தொடர்புடையது
images 1 7
உலகம்செய்திகள்

ரீகன் விளம்பரம் நீக்கப்படாததால் கோபம்: கனடாப் பொருட்களுக்கான வரிகளை 10% உயர்த்த டிரம்ப் அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனைக் கொண்ட வரி எதிர்ப்பு விளம்பரத்தை ஒன்ராறியோ மாகாணம் ஒளிபரப்பியதையடுத்து, கனடாவிலிருந்து...

Weligama Incident 1200x675px 23 10 25
இலங்கைசெய்திகள்

வெலிகம தலைவர் கொலை: சந்தேக நபர்கள் குறித்த பல தகவல்கள் வெளியீடு; தென் மாகாணத்தில் விசேட தேடுதல் நடவடிக்கை!

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பான விசாரணை தற்போது வெற்றிகரமாக நடைபெற்று...

images 8
செய்திகள்இந்தியா

இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனம் Meta உடன் இணைந்து AI துறையில் நுழைவு: ‘Reliance Intelligence’ தொடங்கப்படுகிறது!

செயற்கை நுண்ணறிவு (AI) தற்போது பல துறைகளிலும் கால்பதித்து, ChatGPT மற்றும் Gemini போன்ற நிறுவனங்களால்...

Sea 1200px 22 05 24 1000x600 1
செய்திகள்இலங்கை

வங்காள விரிகுடாவில் ஆழமான தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு: கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!

நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் காற்றானது தென்மேற்கு அல்லது மேற்கு திசையிலிருந்து மணித்தியாலத்துக்கு சுமார் 50 முதல்...