tamilni 62 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடுமையாக நடைமுறையாகும் சட்டம்

Share

இலங்கையில் கடுமையாக நடைமுறையாகும் சட்டம்

ரயில் சேவை உட்பட பொதுப் போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்காக வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் சட்டங்களை கடுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் செப்டம்பர் 12 ஆம் திகதி வெளியிடப்பட்டதுடன், இது ஒரு மாத காலத்திற்கு செல்லுபடியாகும்.

பணிப்பகிஷ்கரிப்பு அல்லது வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு கடமைக்கு சமூகமளிக்காத அனைத்து ரயில்வே ஊழியர்களும் உரிய வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளபடி சேவையை கைவிட்டவர்களாக கருதப்படுவார்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், ஒரு தாக்குதலின் அடிப்படையில் ரயில்வே ஊழியர்களின் குழுவால் தொடங்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த நிலையில் ரயில்வே உதவிக் காவலர்களின் விடுமுறைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், இன்று அனைத்து உதவிக் காவலர்களும் நண்பகல் 12 மணிக்கு முன்னர் பணிக்கு சமூகமளிக்க வேண்டும் என ரயில்வே பொது முகாமையாளர் அறிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
07 8
உலகம்செய்திகள்

ஈரான் போருக்கு பிரிட்டனின் உதவி தேவையில்லை: பிரதமர் கீர் ஸ்டார்மரை விமர்சித்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் போரில், பிரிட்டனின் ஆதரவு...

06 7
உலகம்செய்திகள்

இஸ்ரேலுக்கு அவசரக்கால ஆயுத விற்பனை: அமெரிக்க காங்கிரஸ் அனுமதியைத் தவிர்த்த ட்ரம்ப் நிர்வாகம்

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், இஸ்ரேலுக்கு சுமார்...

05 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாத்தறை சிறைச்சாலையில் கைதிகள் இடமாற்றம்: பதற்றமான சூழலால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது!

மாத்தறை சிறைச்சாலையிலிருந்து ஒன்பது கைதிகள் அங்கிருந்த அங்கிருந்து அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, மாத்தறை சிறைச்சாலையினுள்...

04 7
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிளங்கன் வைத்தியசாலை துஷ்பிரயோகச் சம்பவம்: இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் போராட்டத்திற்கு தடை!

டிக்கோயா கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் பெண்ணின் உடல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும்...