tamilni 62 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடுமையாக நடைமுறையாகும் சட்டம்

Share

இலங்கையில் கடுமையாக நடைமுறையாகும் சட்டம்

ரயில் சேவை உட்பட பொதுப் போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்காக வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் சட்டங்களை கடுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் செப்டம்பர் 12 ஆம் திகதி வெளியிடப்பட்டதுடன், இது ஒரு மாத காலத்திற்கு செல்லுபடியாகும்.

பணிப்பகிஷ்கரிப்பு அல்லது வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு கடமைக்கு சமூகமளிக்காத அனைத்து ரயில்வே ஊழியர்களும் உரிய வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளபடி சேவையை கைவிட்டவர்களாக கருதப்படுவார்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், ஒரு தாக்குதலின் அடிப்படையில் ரயில்வே ஊழியர்களின் குழுவால் தொடங்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த நிலையில் ரயில்வே உதவிக் காவலர்களின் விடுமுறைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், இன்று அனைத்து உதவிக் காவலர்களும் நண்பகல் 12 மணிக்கு முன்னர் பணிக்கு சமூகமளிக்க வேண்டும் என ரயில்வே பொது முகாமையாளர் அறிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
500x300 23304852 4 fog
செய்திகள்விளையாட்டு

இந்தியா – தென்னாப்பிரிக்கா 4-வது டி20 போட்டி ரத்து: லக்னோவில் கடும் பனியால் பாதிப்பு!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில்...

MediaFile 5 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொத்மலை – இறம்பொடை மண்சரிவு: பெண்ணொருவருடையது என சந்தேகிக்கப்படும் உடல் பாகம் மீட்பு!

கொத்மலை – இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கிக் காணாமல் போனவர்களில் ஒரு பெண்ணுடையது...

23 658fd712815b0
இலங்கைசெய்திகள்

பேருந்து – முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் தாய் மற்றும் இரண்டு வயது குழந்தை பலி!

தெஹியத்தகண்டிய, முவகம்மன பகுதியில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

MediaFile 796x445 1
இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு!

வைத்தியசாலை வளாகத்தில் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி...