tamilni 66 scaled
இலங்கைசெய்திகள்

நெருக்கடி நிலைமையில் நாடு! எதிரணிக்கு ரணில் மீண்டும் அழைப்பு

Share

நெருக்கடி நிலைமையில் நாடு! எதிரணிக்கு ரணில் மீண்டும் அழைப்பு

எமது நாடு தற்போது நெருக்கடியான நிலைமையில் இருக்கின்றது. நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களில் அரசுடன் இணைந்து பணியாற்ற முன்வாருங்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சிகளுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நான் சரியென்று இரண்டு பக்கங்களில் (ஆளும், எதிரணி) உள்ளவர்களும் கூறுகின்றனர்.

அப்படியென்றால் இரண்டு பக்கத்தில் உள்ளவர்களும் ஒன்றாக இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம்.

ஏன் எங்களுக்கு இணைந்து செயற்பட முடியாது? அத்துடன், நாடு தற்போது நெருக்கடியான நிலைமையில் இருக்கின்றது.

இந்த நேரத்தில் இரண்டு தரப்பினரும் ஒன்றிணைந்தே நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஆளும் கட்சியாக இருந்தாலும் எங்கள் அனைவருக்கும் ஒரே அச்சுறுத்தலே உள்ளது.

அதில் இருந்து மீள்வதற்கு வேறு வேலைத்திட்டங்கள் இருக்குமாக இருந்தால் அதனைக் கூறுங்கள்.

ஆனால், யாரும் வேலைத்திட்டங்களை முன்வைக்கவில்லை. தற்போதைய கொள்கைத் திட்டங்களை இரண்டு தரப்பிலும் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்வதால் இரண்டு தரப்பினரும் ஒன்றாக வேலை செய்து நாட்டுக்குக் காட்டுவோம் என தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3
செய்திகள்இலங்கை

தனிப்பட்ட பாதுகாப்பிற்காகத் துப்பாக்கிகள் கோரி சுமார் 20 எம்.பி.க்கள் விண்ணப்பம் – பாதுகாப்பு அமைச்சின் பரிசீலனையில் கோரிக்கை!

பாராளுமன்ற வட்டாரத் தகவல்களின்படி, தமது தனிப்பட்ட பாதுகாப்பிற்காகத் துப்பாக்கிகளை வழங்குமாறு சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

MediaFile 2
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியவில்லை: போதைப்பொருள் கலாசாரம் மேலோங்கியுள்ளதாக சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு!

தற்போதைய அரசாங்கத்தினால் சட்டம் ஒழுங்கை உரிய வகையில் நிலைநாட்ட முடியாமல் போயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

MediaFile 3
இலங்கைசெய்திகள்

அரச வருமானம் 24.8% அதிகரிப்பு: 2025 முதல் அரையாண்டில் மொத்த வருமானம் ரூ. 2,321.7 பில்லியன்!

இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் அன்பளிப்புகள் நீங்கலாக அரசாங்கத்தின் மொத்த வருமானம் 2,321.7 பில்லியன் ரூவாக...

MediaFile 1
இலங்கைசெய்திகள்

உடுகம்பொல சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு: ‘உயரதிகாரியின் சகோதரி’ எனக் கூறியவர் போலியானவர் என பொலிஸ் உறுதி!

உடுகம்பொல வாரச் சந்தைக்கு அருகில் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த பெண்...