tamilni 66 scaled
இலங்கைசெய்திகள்

நெருக்கடி நிலைமையில் நாடு! எதிரணிக்கு ரணில் மீண்டும் அழைப்பு

Share

நெருக்கடி நிலைமையில் நாடு! எதிரணிக்கு ரணில் மீண்டும் அழைப்பு

எமது நாடு தற்போது நெருக்கடியான நிலைமையில் இருக்கின்றது. நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களில் அரசுடன் இணைந்து பணியாற்ற முன்வாருங்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சிகளுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நான் சரியென்று இரண்டு பக்கங்களில் (ஆளும், எதிரணி) உள்ளவர்களும் கூறுகின்றனர்.

அப்படியென்றால் இரண்டு பக்கத்தில் உள்ளவர்களும் ஒன்றாக இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம்.

ஏன் எங்களுக்கு இணைந்து செயற்பட முடியாது? அத்துடன், நாடு தற்போது நெருக்கடியான நிலைமையில் இருக்கின்றது.

இந்த நேரத்தில் இரண்டு தரப்பினரும் ஒன்றிணைந்தே நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஆளும் கட்சியாக இருந்தாலும் எங்கள் அனைவருக்கும் ஒரே அச்சுறுத்தலே உள்ளது.

அதில் இருந்து மீள்வதற்கு வேறு வேலைத்திட்டங்கள் இருக்குமாக இருந்தால் அதனைக் கூறுங்கள்.

ஆனால், யாரும் வேலைத்திட்டங்களை முன்வைக்கவில்லை. தற்போதைய கொள்கைத் திட்டங்களை இரண்டு தரப்பிலும் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்வதால் இரண்டு தரப்பினரும் ஒன்றாக வேலை செய்து நாட்டுக்குக் காட்டுவோம் என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 13
இலங்கைசெய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு வடக்கு, வட மத்திய, புத்தளம் மற்றும் திருகோணமலைக்கு மழை வாய்ப்பு! 

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (டிசம்பர் 11) வெளியிட்டுள்ளது. அதன்படி,...

25 67abee737d4d3
அரசியல்இலங்கைசெய்திகள்

அரச சேவையில் 2,284 புதிய வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு: அமைச்சரவை அங்கீகாரம்! 

இலங்கை அரச சேவையில் தற்போது நிலவும் 2,284 பதவி வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்...

images 6 4
இலங்கைசெய்திகள்

சந்திரிக்காவின் நன்கொடை பாராட்டுக்குரியது: எதிர்க்கட்சிகளின் அரசியல் வங்குரோத்து குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க விமர்சனம்!

ஊழலற்ற அரச நிர்வாகத்தை அமுல்படுத்தியுள்ளதால் தான் உலக நாடுகள் அனைத்தும் ஜனாதிபதி மீது நம்பிக்கை கொண்டு...

25 6939a0f597196
இலங்கைசெய்திகள்

சூறாவளியால் இலங்கைக் கரையோரப் பகுதி 143 கி.மீ மாசு: குப்பைகளை அகற்ற 3 வாரங்கள் ஆகும்!

‘திட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, இலங்கையின் கரையோரப் பகுதியில் 143 கிலோ மீற்றர்...