tamilni 66 scaled
இலங்கைசெய்திகள்

நெருக்கடி நிலைமையில் நாடு! எதிரணிக்கு ரணில் மீண்டும் அழைப்பு

Share

நெருக்கடி நிலைமையில் நாடு! எதிரணிக்கு ரணில் மீண்டும் அழைப்பு

எமது நாடு தற்போது நெருக்கடியான நிலைமையில் இருக்கின்றது. நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களில் அரசுடன் இணைந்து பணியாற்ற முன்வாருங்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சிகளுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நான் சரியென்று இரண்டு பக்கங்களில் (ஆளும், எதிரணி) உள்ளவர்களும் கூறுகின்றனர்.

அப்படியென்றால் இரண்டு பக்கத்தில் உள்ளவர்களும் ஒன்றாக இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம்.

ஏன் எங்களுக்கு இணைந்து செயற்பட முடியாது? அத்துடன், நாடு தற்போது நெருக்கடியான நிலைமையில் இருக்கின்றது.

இந்த நேரத்தில் இரண்டு தரப்பினரும் ஒன்றிணைந்தே நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஆளும் கட்சியாக இருந்தாலும் எங்கள் அனைவருக்கும் ஒரே அச்சுறுத்தலே உள்ளது.

அதில் இருந்து மீள்வதற்கு வேறு வேலைத்திட்டங்கள் இருக்குமாக இருந்தால் அதனைக் கூறுங்கள்.

ஆனால், யாரும் வேலைத்திட்டங்களை முன்வைக்கவில்லை. தற்போதைய கொள்கைத் திட்டங்களை இரண்டு தரப்பிலும் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்வதால் இரண்டு தரப்பினரும் ஒன்றாக வேலை செய்து நாட்டுக்குக் காட்டுவோம் என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

MediaFile 21
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் 290 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது!

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஐஸ் (Ice) போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள்...

6.WhatsApp Image 2024 11 20 at 09.04.56
இலங்கைஅரசியல்செய்திகள்

மீனவர்களைப் பாதுகாப்போம், கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவோம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி!

இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், அவர்களை நிச்சயம் பாதுகாப்பதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும்...