இலங்கைசெய்திகள்

“காதலி” வாழை! யாழ் கலந்துரையாடலில் வினோதம்

rtjy 303 scaled
Share

“காதலி” வாழை! யாழ் கலந்துரையாடலில் வினோதம்

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி கலந்துரையாடலில் “கதலி” வாழைக்கு பதிலாக “காதலி,” வாழை என திரையில் தோன்றியுள்ளது.

யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் இவ்வாறான கருத்துப் பிழையான பொருள் கோடல்கள் இடம்பெறுவது பிரதம திட்டமிடல் கிளையினரின் பிழை என கூறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடல் கடந்த இரு மாதங்களாக கூட்டத்திற்கான திகதி அமைச்சர் டக்ளாஸ் தேவானந்தாவின் கொழும்பு சந்திப்புக்களின் நிமித்தம் பிற்போடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலும் கூட ஏற்கனவே தயாரிக்கப்பட்ட விடயதானங்கள் கூட்டத் திகதிகள் பிற்போடப்பட்டும் எழுத்துப் பிழைகள் மீண்டும் மேற்பார்வை செய்யவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தவறுகள் விடுவது மனித இயல்பு ஆனால் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் இவ்வாறான கருத்துப் பிழையான பொருள் கோடல்கள் இடம்பெறுவது பிரதம திட்டமிடல் கிளையினர் தாங்கள் பெற்றுக்கொண்ட விடயங்களை உயர் கலந்துரையாடல் ஒன்றுக்கு சமர்ப்பிக்கும் போது திரும்ப மேற்பார்வை செய்யவில்லையா என்றும் பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...