tamilni 377 scaled
இலங்கைசெய்திகள்

சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

Share

சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

நாட்டில் பல்வேறு பகுதிகளில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மலையகப்பகுதிகளுக்கு செல்லும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதி, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி மற்றும் பதுளை – கொழும்பு பிரதான வீதிகளில் அதிக பனிமூட்டம் நிலவுவதாகவும் இதனால் இந்த வீதிகளில் செல்லும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த வீதிகளில் மண்சரிவு நிலவும் அபாயம் காணப்படுவதன் காரணமாக சாரதிகள் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறும் அறிவித்தல் விடுத்துள்ளனர்.

இதேவேளை ஹட்டன் – கொட்டகலை வீதியில் அதிக வேகத்துடன் பயணித்த மகிழுந்து ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்றும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.

டிக்கோயா பகுதியிலிருந்து சென்ற மகிழுந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாகவும் மகிழுந்தில் சாரதி மாத்திரமே பயணித்துள்ளார் என்பதோடு அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
09 A corruption
செய்திகள்இலங்கை

பிடியாணை, போதை வாகனம் உட்பட ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் கைது!

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பிடியாணை மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக ஒரே நாளில்...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறையில் அதிர்ச்சிச் சம்பவம்:  மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்...

1795415 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை...

aJqHp SD
செய்திகள்உலகம்

இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11...