tamilni 340 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் தடம் புரண்ட தொடருந்து

Share

கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் தடம் புரண்ட தொடருந்து

கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதன் காரணமாக கரையோர தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் கொள்ளுப்பிட்டி பகுதியில் இன்று (27.09.2023) காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மஹவயிலிருந்து மொரட்டுவை நோக்கி பயணித்த தொடருந்தே கொள்ளுப்பிட்டி பகுதியில் தடம் புரண்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடருந்து தடம் புரண்டதன் காரணமாக கரையோரப் பாதையில் ஒரு பாதையில் மாத்திரம் தொடருந்து இயங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பிலிருந்து செல்லும் பயணிளுக்கு அசௌகரியங்கள் ஏற்படக்கூடும் என்பதால் மாற்றுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடருந்து தடம் புரண்டதன் காரணமாக தொடருந்து பாதையும் சேதமடைந்துள்ளதாகவும், திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....