rtjy 231 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் இரத்தக்களரியை ஏற்படுத்தலாம்! கடும் தொனியில் மிரட்டல்

Share

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் இரத்தக்களரியை ஏற்படுத்தலாம்! கடும் தொனியில் மிரட்டல்

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் நாட்டில் மீண்டும் இனமோதலுக்கு வழி வகுத்து இரத்தக்களரியை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கடற்படை தளபதியுமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளை நினைவேந்தும் இப்படியான நிகழ்வுகளை தமிழ் அரசியல்வாதிகள் உடனடியாக நிறுத்த வேண்டும்.

வடக்கில் திலீபனை நினைவேந்தும் நிகழ்வுகளுக்குத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி மாவட்ட நீதி மன்றங்களில் பொலிஸார் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

எனினும் வடக்கில் உள்ள மாவட்ட நீதிமன்றங்கள் அந்த மனுக்களைத் தள்ளுபடி செய்து திலீபன் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கியுள்ளன. வடக்கு நீதிமன்றங்கள் இப்படியான கட்டளைகளைத்தான் வழங்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.

எனினும் பொலிஸார் தமது கடமைகளை உரிய வகையில் செய்து வருகின்றனர். வடக்கிலும்,கிழக்கிலும் பொலிஸாருக்குச் சவால் விடும் வகையில் தமிழ் அரசியல்வாதிகள் செயற்பட்டு வருகின்றனர். அவர்களைத் திருத்தவே முடியாது.

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் நாட்டில் மீண்டும் இன மோதலுக்கு வழிவகுத்து இரத்தக்களரியை ஏற்ப டுத்தும் என்பதைத் தமிழ் அரசியல்வாதிகளிடம் தெரிவித்துக்கொள்கின்றேன்.

தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளை நினைவேந்தும் இப்படியான நிகழ்வுகளை தமிழ் அரசியல்வாதிகள் உடனடியாக நிறுத்த வேண்டும். எனவே இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவும் , நாடாளுமன்ற தெரிவுக்குழுவும் சுயாதீன விசாரணைகளை நடத்தி அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும் தேவையேற்படின் சர்வதேச விசாரணையை நாட முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 6 2
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் புதிய சகாப்தம்: கடவுச்சீட்டு சோதனை இல்லை, நீண்ட வரிசை இல்லை! – AI மூலம் விமான நிலையங்களில் முக ஸ்கேன் அனுமதி!

பிரித்தானியா, தனது விமான நிலையம் ஒன்றில், நவீன தொழில்நுட்பம் மூலம் கடவுச்சீட்டு சோதனை இல்லாமலே பயணிகளை...

skynews donald trump benjamin netanyahu 7080062
செய்திகள்உலகம்

ஊழல் வழக்கில் நெதன்யாகுவை மன்னிக்க வேண்டும்: ட்ரம்ப் கடிதத்துக்கு இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு!

ஊழல் வழக்குகளில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) மன்னிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஐசக்...

articles2FgwJ5r85aOgQuM4EhGVg6
அரசியல்இலங்கைசெய்திகள்

நுகேகொடைப் பேரணி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டவே: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுப்போம் – நாமல் ராஜபக்ச!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி, அரசாங்கம் மக்களுக்கு...

25 6915d20fc755f
செய்திகள்அரசியல்இலங்கை

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மட்டுமே; சட்டத்தின் முன் அனைவரும் சமமே”: கார்த்திகை வீரர்கள் தினத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மாத்திரமே என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நடைபெற்ற கார்த்திகை வீரர்கள்...