rtjy 216 scaled
இலங்கைசெய்திகள்

ஐ.நாவின் பிடியில் இருந்து தப்புவதற்கு கோட்டாபய – பிள்ளையான் திட்டம்

Share

ஐ.நாவின் பிடியில் இருந்து தப்புவதற்கு கோட்டாபய – பிள்ளையான் திட்டம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட ஆவணப்பட சர்ச்சையானது இலங்கை அரசியலில் பெரும் குழப்ப நிலையை தோற்றுவித்து வருகிறது.

ஆளும்தரப்பு, எதிர்தரப்பு மற்றும் இலங்கையின் கத்தோலிக்க சமூகம் உள்ளிட்ட அனைத்து தரப்புக்களும் சர்வதேச விசாரணைகளை வலியுறுத்தி வருகின்றன.

இவ்வாறு இலங்கை அரசியலில் சனல் 4 ஆவணப்படம் ஏற்படுத்திய தாக்கங்கள் தொடர்பில் இலங்கையின் புலனாய்வு செய்தியாளர் எம். எம் நிலாம்டீன் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.

மேலும், இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலுக்கு நீதி கிடைக்க வேண்டுமென சர்வதேச விசாரணையை பல்வேறு தரப்புக்களும் கோரி வருகின்றன எனவும் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

”ஆவணப்படத்தில் குற்றவாளியாக பெயரிடப்பட்ட கோட்டாபய, பிள்ளையான் உள்ளிட்டவர்களும் சர்வதேச விசாரணையை கோரி வருகின்றனர். எனினும் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச விசாரணை தொர்பில் இதுவரை எந்த கருத்துக்களையும் வெளிப்படுத்தவில்லை.

மேலும் அசாத் மௌலானா பிள்ளையான் செய்த அனைத்து குற்றங்களுக்கும் உடந்தையாளர்.

இன்னிலையில், அவர் குற்றங்களை ஒப்புக்கொண்டதன் மூலம் சர்வதேச விசாரணையில் மன்னிக்கப்படுவதற்க்கான வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகிறது” என தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
1765326736 Sri Lanka showers Met 6
செய்திகள்இலங்கை

தீவிரமடையும் மழையினால் நீர்நிலைகள் நிரம்புகின்றன: வடகிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டில் மீண்டும் அதிதீவிர மழைவீழ்ச்சி பதிவாகுமாயின், நீர்நிலைகளின் நீர்மட்டம்...

image 870x 66fcf5f77e960
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு: இது வெறும் வாக்குறுதி அல்ல, செயல் வடிவம் பெறும்- அமைச்சர் விஜித ஹேரத் உறுதி!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியான நிரந்தரத் தீர்வு வழங்கப்படும் என்றும், கடந்த காலங்களைப் போலன்றி...

IMG 2110
செய்திகள்உலகம்

சீனாவில் தேவாலயங்கள் மீது கடும் நடவடிக்கை: கட்டிடம் இடிப்பு மற்றும் முக்கிய தலைவர்கள் கைது!

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத ‘நிலத்தடி தேவாலயங்கள்’ (Underground Churches) மீது அந்நாட்டு கம்யூனிஸ்ட் அரசு...

images 14 1
செய்திகள்உலகம்

வெனிசுவேலா ஜனாதிபதி கைது செய்யப்பட்டது ஐநா கோட்பாடுகளுக்கு எதிரானது – அமைச்சர் பிமல் ரத்நாயக்க கண்டனம்!

ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட வெனிசுவேலா ஜனாதிபதியை அமெரிக்கா கைது செய்துள்ளமையானது சர்வதேச சட்டங்களையும் ஐக்கிய...