rtjy 206 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

பிள்ளையானின் சொத்துக்களை பறிமுதல் செய்யுங்கள்

Share

பிள்ளையானின் சொத்துக்களை பறிமுதல் செய்யுங்கள்

கடத்தல் மற்றும் கொலைகள் மூலம் இராஜாங்க அமைச்சர் சி. சிவநேசதுரை சந்திரகாந்தன்( பிள்ளையான்) பெற்ற சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி காரியாலயத்தில் நேற்று முன்தினம் (20.09.2023) இடம்பெற்ற ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

சனல் 4 ஆவணப்படம் உயிர்த்த ஞாயிறு தின குண்டுவெடிப்பு சூத்திரதாரிகளை மிக தெளிவாக அடையாளப்படுத்தியதுடன் இந்த தாக்குதலுக்கு பின்னால் இருந்த சூத்திரதாரிகள் இந்த மண்ணிலே செய்த அட்டூழியங்கள் வெளிக் கொண்டுவரப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி எனக்கூறி மக்கள் மத்தியில் தன்னை அடையாளப்படுத்தி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி என்ற பெயரில் புலிகள் என்ற நாமத்தை வைத்து மக்களை ஏமாற்றி அரசியல் செய்துவந்த ஒரு சூத்திரதாரியே பிள்ளையான்.

அவருடன் நெருக்கமாக இருந்த ஆசாத் மௌலானா மூலம் அந்த உண்மைகளை வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளதையடுத்து மக்கள் விழிப்படைந்துள்ளனர்.

எனவே இனியும் மக்கள் ஏமாறக்கூடாது. தமிழ் மக்கள் போராடிவந்த ஆயுத போராட்டத்தை கடந்த 13 வருடங்களாக இப்படிப்பட்டவர்கள் சிங்கள தேசத்துடன் இணைந்து காட்டிகொடுத்து தமிழ் மக்கள் தாய், தந்தை அற்ற அனாதைகளாக காணப்படுவதற்கு காரணமான பிள்ளையான் போன்ற நபர்கள் இன்று ஆதாரங்களுடன் பிடிபட்டுள்ளனர்.

பிள்ளையான் விடுதலைப்புலிகளில் இருந்து பிரிவதற்கு முன்னர் அவரின் குடும்ப பின்னனி அந்த பகுதி மக்களுக்கு தெரியும்.அவருக்கு எந்தவிதமான சொத்துக்களும் இல்லை. ஆனால் அண்மையிலே வீடியோ மூலம் வாழைச்சேனையில் பரம்பரைக் காணி இருப்பதாகத்தெரிவித்துள்ளார்.

இதனை பார்க்கும்போது இவர் ஊழல், இலஞ்சம், கொலைகள், கொள்ளைகள், கடத்தல் போன்ற செயல்கள் மூலம் கோடிக்கணக்கான சொத்துக்களை வைத்திருக்கின்றார் என அறிய முடிகின்றது.

எனவே இவ்வாறாக சேகரித்த அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டு இந்த மாவட்டத்திலே இவரால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் கொடுக்கப்பட வேண்டுமென நீதி பிறப்பியுங்கள்” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

MediaFile 6 1
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அஞ்சலி!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...