இலங்கைசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அப்பட்டமாக பொய் சொல்லும் பொன்சேகா

tamilni 292 scaled
Share

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அப்பட்டமாக பொய் சொல்லும் பொன்சேகா

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சரத் பொன்சேகாவின் கருத்துக்கள் அப்பட்டமான பொய் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு முற்றிலும் ஒருதலைப்பட்சமானது.

சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் ஆயிரம், ஆயிரத்து ஐநூறு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அவர்களைப் பற்றி அவர் பேசுவதில்லை.

இராணுவத் தலைமையகத்தைப் பாதுகாக்க முடியாத இராணுவத் தளபதி அவர்.

அவரது குடல் வெளியே வர குண்டுகள் வீசப்பட்டன. குடல்கள் ஒரு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டன. அவரை வேறு வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். அப்படிப்பட்டவர் இன்று தேசிய பாதுகாப்பு பற்றி பேசுகிறார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு முற்றிலும் ஒருதலைப்பட்சமானது. அப்போதும் கூறினேன். இன்றும் கூறுகிறேன்.

இதற்கு முன்னர் மகிந்த ராஜபக்சவே இவ்வாறு செய்தார் எனவும் அவரை பாதுகாப்புச் சபைக்கு அழைப்பு விடுக்குமாறும் என்னிடம் கோரிக்கை விடுத்த போதும் நான் அவரை அழைக்கவில்லை என சரத் பொன்சேகா தெரிவித்தார்.

பாதுகாப்புச் சபையைக் கூட்டுமாறு என்னிடம் கேட்கப்பட்டதாக கூறும் விடயத்தை நான் முற்றிலும் நிராகரிக்கிறேன்” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....