tamilni 265 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்

Share

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் தேவையான வேட்பாளர்கள் இருக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தை பாதுகாக்கும் நோக்குடனேயே ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்கினோம். அதனை நன்றாக அறிந்து கொள்ளுங்கள். அவரால் மாயாஜாலம் செய்ய முடியாது என்பதை நாங்கள் நன்கு அறிவோம்.

ரணில் விக்ரமசிங்க நான்கு வருடங்கள் பிரதமராக இருந்தார். ஆனால் ஒரு தடவைக் கூட அவரால் பிரதமர் பதவியை முழுமைப்படுத்த முடியவில்லை அல்லவா? குறைந்தபட்சம் கொழும்பு மாவட்டத்தில் ஐந்து இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஒருவருக்கு தனது ஆசனத்தையேனும் பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை அல்லவா..

ஆகவே மக்கள் சார்பாக நாங்கள் எடுத்த தீர்மானம் ரணில் விக்ரமசிங்கவின் திறன்களை மதிப்பிடாமல் எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல. அந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தை பாதுகாப்பதற்காகவே முன்னுரிமை அளிக்கப்பட்டது.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவாராயின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அவருக்காக முன்னிற்கும் என நாங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் தேவையான வேட்பாளர்கள் இருக்கின்றனர் என குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சிபெட்கோ மாதாந்த விலை திருத்தம்: டிசம்பர் மாத எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை!

‘சிபெட்கோ’ (CEYPETCO) எனப்படும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றமில்லை...

images 5 2
செய்திகள்இலங்கை

கொழும்பு – கண்டி வீதி: யக்கலவில் பாலம் இடிந்து விழுந்தது; போக்குவரத்து தடை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான...

landslide 1
செய்திகள்இலங்கை

அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகள் 159 ஆக உயர்வு; 203 பேர் காணாமல் போயுள்ளனர் – அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

நாட்டில் ஏற்பட்ட பேரழிவுகளில் சிக்கி இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,...

images 4 3
செய்திகள்இந்தியாஇலங்கை

இலங்கைக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், உடனடி உதவிகளை அறிவித்தார் பிரதமர் மோடி!

தீவிரமான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் “திட்வா” (DITWA) புயலின் காரணமாகத் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த...