tamilni 274 scaled
இலங்கைசெய்திகள்

ஆசிரியர் ஆட்சேர்ப்பு தொடர்பில் அறிவிப்பு

Share

ஆசிரியர் ஆட்சேர்ப்பு தொடர்பில் அறிவிப்பு

2021ஆம் ஆண்டுக்கான ஆசிரிய ஆட்சேர்ப்பு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன நேற்று (20) வினவிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, வர்த்தமானி திருத்தம் செய்யப்பட்ட உடனேயே அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

2019 மற்றும் 2020 தேர்வர்கள் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் 19 பீடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இரண்டாம் ஆண்டு மாணவர்களின் தேர்வுக்குப் பின்னர் இவர்கள் அனைவரையும் ஒக்டோபர் மாத தொடக்கத்தில் 19 பீடங்களுக்கு உள்வாங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி தரவுகளின் அடிப்படையில் பாடங்கள், ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளன.

எனவே வர்த்தமானி அறிவிப்பில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் எனவும், அந்த வர்த்தமானி அறிவித்தல் அடுத்த இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை: 763 பேர் கைது எனப் பொலிஸார் அறிவிப்பு!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்டாவில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

கொழும்பு, பெட்டா பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, எவ்வித லேபிள்களும் இன்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10...

world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்ச்சைக்குரிய மருத்துவ நியமன நடைமுறை: மே 8 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சைக்குரிய உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ நியமன நடைமுறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு...

world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...