tamilni 246 scaled
இலங்கைசெய்திகள்

பல இலட்சம் மோசடி செய்த சந்தேகநபர் கைது

Share

பல இலட்சம் மோசடி செய்த சந்தேகநபர் கைது

அவுஸ்திரேலியா அனுப்புவதாக கூறி பெருமளவிளான பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் யாழ்ப்பாண மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊர்காவற்றுறையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் விளம்பரங்கள் மூலமாக அவுஸ்திரேலியா செல்வதற்காக கொழும்பில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அறிமுகமாகி கட்டம் கட்டங்களாக 75 லட்சம் ரூபாவை வங்கியில் வைப்பிலிட்டுள்ளார்.

வங்கியில் பணம் வைப்பிலிட்டு நீண்ட காலங்களாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமையால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து யாழ்.மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய விசாரணைகளை முன்னெடுத்த குழுவினர், கொழும்பினைச் சேர்ந்த சந்தேகநபரை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளை இந்தச் சந்தேகநபரால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
11 7
இலங்கைசெய்திகள்

கல்குளம் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது

அநுராதபுரம்-கல்குளம் அருகே நேற்று முன்தினம் (26) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது...

12 10
இலங்கைசெய்திகள்

திங்கட்கிழமை நடைபெறவுள்ள விசேட நாடாளுமன்ற அமர்வு

எதிர்வரும் திங்கட்கிழமை(30) விசேட நாடாளுமன்ற அமர்வொன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் ஹரிணி அமரசூரிய, குறித்த...

10 7
இலங்கைசெய்திகள்

35 வருடங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட காணி மீண்டும் இராணுவத்தினரால் சுவீகரிப்பு

யாழ்ப்பாணம் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்கு பின்னர் நேற்றுமுன்தினம் விடுவிக்கப்பட்டு இன்று...

6 15
இலங்கைசெய்திகள்

ஜூலை முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்படும் நடைமுறை – வெளியான அறிவிப்பு

சகல பயணிகள் பேருந்துகளின் சாரதிகளுக்கும் ஆசனப்பட்டிகள் கட்டாயமாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை எதிர்வரும் ஜூலை முதலாம்...