tamilni 216 scaled
இலங்கைசெய்திகள்

அமெரிக்காவிடம் உதவி கோரும் இலங்கை

Share

அமெரிக்காவிடம் உதவி கோரும் இலங்கை

ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தொழில்நுட்ப உதவி மற்றும் பயிற்சியை அமெரிக்காவிடம் இருந்து இலங்கை கோரியுள்ளது.

வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில், அமெரிக்காவும் இலங்கையும் நேற்று (10) கொழும்பில் பதினான்காவது வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு சந்திப்பை நடத்தின.

இந்தக்கூட்டத்தின் போது, இரண்டு நாட்டு பிரதிநிதிகளும் முதலீட்டு சூழல், சமீபத்திய தொழிலாளர் சீர்திருத்தங்கள், அறிவுசார் சொத்து பாதுகாப்பு நடைமுறை, சுங்கம் உட்பட்ட சந்தை அணுகலுக்கான தொழில்நுட்ப தடைகள் குறித்து ஆராய்ந்தனர்.

இந்தநிலையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை அங்கீகரிப்பதில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறன் என்பன முக்கிய உந்துசக்திகளாக வலியுறுத்தப்பட்டன.

அத்துடன் ஊழலுக்கு எதிரான வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தை அமெரிக்கா அடிக்கோடிட்டுக் காட்டியது இதன்போதே, தற்போது முன்மொழியப்பட்டுள்ள ஊழல் தடுப்புச் சட்டத்தின் நடைமுறைக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கவேண்டும் என்று அமெரிக்காவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 5
செய்திகள்இலங்கை

ஏர்பஸ் ஊழல் விசாரணை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப்பாணை விடுக்கப்படவில்லை என ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...