இலங்கை

நீதிபதி இளஞ்செழியனின் தாயாரது உடல் கண்ணீர் காணிக்கையுடன் தீயில் சங்கமம்

Published

on

நீதிபதி இளஞ்செழியனின் தாயாரது உடல் கண்ணீர் காணிக்கையுடன் தீயில் சங்கமம்

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் தாயார் சிவபாக்கியம் மாணிக்கவாசகரின்(வயது 86) உடல் ஊர்மக்களின் கண்ணீர் காணிக்கையுடன் தீயில் சங்கமித்துள்ளது.

வேலணை மண்ணில் பிறந்து, வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியை பயின்று, வேலணை மத்திய கல்லூரியில் உயர் கல்வியை கற்று, ஆசிரியராக வேலணை கிழக்கு மகா. வித்தியாலயத்தில் நியமனம் பெற்று அதிபராக அதே பாடசாலையில் பதவி உயர்வு பெற்று 35 ஆண்டுகள் கல்வி பணியை நிறைவேற்றிய அமரர் ஓய்வு நிலை அதிபர் சிவபாக்கியம் மாணிக்கவாசகரின் இழப்பு பேரிழப்பு என அன்னாரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

அமரர், 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனைகளை நிலைநாட்டியவர். வேலணை மண்ணின் மாணவ செல்வங்களை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைய செய்து யாழின் பிரபல பாடசாலைகளில் அனுமதி கிடைக்க வழி செய்தவர்.

14.09.2023 இயற்கையெய்திய அமரர் இரண்டு நாட்கள் கொழும்பில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டபோது, நீதிபதிகள், சட்டமா அதிபர்கள், அரச வைத்தியர்கள், ஜனாதிபதி சட்டத்தரணிகள், சட்டத்தரணிகள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

17.09.2023 இரண்டு நாட்கள் அன்னார் யாழ்ப்பாணத்தில் அஞ்சலிக்காக வைத்தபோது நீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டத்தரணிகள், பல்கலைக்கழக சமூகம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

18.09.2023 இறுதிக்கிரியைகள் இடம்பெற்று அன்னார் பிறந்த மண்ணில் வேலணை கிழக்கு மக வித்தியாலயம் முன்பாக அமரரின் ஊர்தி சென்ற போது பாடசாலை மாணவிகள் பூச்சரங்கள் இட்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

அன்னாரின் பூர்வீக வீட்டில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் முக்கியஸ்தர்களால் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மற்றும் உடற்கல்வி துறை சிரேஷ்ட விரிவுரையாளர் இளம்பிறையன் ஆகியோரின் தாயாரான சிவபாக்கியம் மாணிக்கவாசகர் வேலணை சாட்டி மயானத்தில் அக்கினியில் ஊர்மக்களின் கண்ணீர் காணிக்கையுடன் சங்கமித்தார்.

Exit mobile version