rtjy 174 scaled
இலங்கைசெய்திகள்

தமிழர் தாயகத்தில் பல இரகசிய மனித புதைகுழிகள்

Share

தமிழர் தாயகத்தில் பல இரகசிய மனித புதைகுழிகள்

இன அழிப்புச் செய்யப்பட்ட சமூகத்துக்கான இறுதி நீதியாக இன விடுதலையே வழங்கப்பட வேண்டும், இதனை அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்பாகவும் இருக்கும் எனவும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

வடக்கு – கிழக்கில் கொக்குத்தொடுவாய் போன்று மேலும் பல மனித புதைகுழிகள் இரகசியமாக காணப்படலாம் என்ற அச்சம் உள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கொக்குத்தொடுவாயில் மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டு அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் 17 எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளன. அவை தொடர்பில் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட வேண்டியது அவசியமாகிறது.

இதேவேளை, வடக்கு, கிழக்கில் அசாதாரண காலத்தில் கடத்தப்பட்டவர்கள், காணாமலாக்கப்பட்டவர்கள், சரணடைந்தவர்கள் என்று ஆயிரக்கணக்கானவர்களுக்கு என்ன நடந்தது என்பது தற்போது வரையில் வெளிவராத நிலைமையிலேயே உள்ளது.

இந்நிலையில், வடக்கு, கிழக்கில் கொக்குத்தொடுவாய் போன்று மேலும் பல மனித புதைகுழிகள் இரகசியமாக காணப்படலாம் என்ற அச்சம் எமக்கு உள்ளது.

ஆகவே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் சர்வதேச தரப்பினர், வடக்கு, கிழக்கில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான தீர்மானத்தினை விரைந்து எடுத்து, துறை சார்ந்த நிபுணத்துவம் வாய்ந்தவர்களை பங்கேற்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அதன் மூலம் தமிழினத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் வெளிப்படுவதுடன், திட்டமிட்ட வகையில் இன அழிப்பு நடைபெற்றுள்ளது என்பதும் உறுதிப்படுத்தப்படும். எனவே, மனித புதைகுழி விடயத்தில் உள்நாட்டு ஆய்வுகள், தடய சேகரிப்புக்களுக்கு அப்பாலான நடவடிக்கைகள் அவசியம் என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Screenshot 2025 12 22 110737 1170x800 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைக்கவசம் இன்றி அதிவேகப் பயணம்: மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – வாலிபர் பலி, சிறுவன் உட்பட நால்வர் காயம்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர்...

IMG 2581 1170x658 1
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி எங்கள் சொத்து; விகாரையை அகற்று – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும்...

images 2 7
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி: 11 மாதங்களில் 15,776 மில்லியன் டொலர் வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி – நவம்பர்)...

603890102 1355544646614961 2421916803890790440 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறை கடற்கரையில் இரு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுக்கம்!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மற்றும் கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று (22) மதியம் இரண்டு...