rtjy 157 scaled
இலங்கைசெய்திகள்

மட்டக்களப்பில் 17 வயது யுவதி உயிரிழப்பு

Share

மட்டக்களப்பில் 17 வயது யுவதி உயிரிழப்பு

மட்டக்களப்பில் 17 வயதான யுவதியொருவர் உயிரிழந்த சம்பவம் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு யுவதியின் தாய் கருத்து தெரிவிக்கையில், “தோல் நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே எனது மகள் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தோல் நோய்ப் பிரிவில் மருந்துகளை பெற்று அருந்தி வந்த நிலையிலேயே எனது மகளுக்கு திடீரென காய்ச்சலும், வாந்தி நிலைமையும் ஏற்பட்டது. இதனையடுத்தே மகள் உயிரிழந்து விட்டார்” என குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

 

மட்டக்களப்பில் 17 வயது யுவதி திடீரென உயிரிழப்பு(Photos) | 17 Year Girl Death In Batticaloa

எனினும் இந்த விடயம் தொடர்பில் உயிரிழந்த யுவதியின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே உறுதியான தகவல்களை வெளியிடமுடியும் என வைத்தியசாலை தரப்பு தெரிவிப்பதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் குறித்த யுவதியின் உயிரிழப்பிற்கான காரணம் தொடர்பான மேலதிக தகவல்களை அறியும் முயற்சியை எமது செய்திப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

எனவே பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்னர் சம்பவம் தொடர்பான முழுமையான விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...