rtjy 129 scaled
இலங்கைசெய்திகள்

திருகோணமலையில் பிக்கு ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல்

Share

திருகோணமலையில் பிக்கு ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல்

திருகோணமலை– பொரலுகந்த ரஜமஹா விகாரை அமைப்பதற்கு முன்னின்று செயற்பட்ட பௌத்த பிக்குவிற்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மொரவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மொரவெவ- தெவனிபியவர இந்ரா ராம விகாரையின் விஹாராதிபதி பொல்ஹேன்கொட உபரத்ன ஹிமி நேற்றுமுன்தினம் (11.09 2023) ஆம் திகதி இம்முறைப்பாட்டினை செய்துள்ளார்.

அம்முறைப்பாட்டில் சொகுசு வெள்ளை வானில் நான்கு பேர் தனக்கு சொந்தமான இரண்டு விகாரைகளுக்கும் தேடிச் வந்ததாகவும், குறித்த வேனில் வருகை தந்தவர்கள் யார் என்று தெரியாது எனவும் தனக்கு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அம்முறைபாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருகோணமலை இலுப்பை குளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பொரலுகந்த ரஜமஹா விகாரையின் நிர்மாண பணிகளை இடைநிறுத்தப்பட்டமைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னின்று செய்ததாகவும், அதனால் தனக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் குறித்த முறைப்பாட்டிற்கு அமைவாக மொரவெவ பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், விகாரைக்கு வருகை தந்த வெள்ளை வான் தொடர்பில் வாக்குமூலங்களை பெற்று வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
MediaFile 10
இந்தியாசெய்திகள்

படைவீரர் கொடி நாள் இன்று அனுசரிப்பு: முப்படை வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் பிரதமர் மோடி நிதி அளிப்பு.

இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ஆம் திகதி...

MediaFile 9 1100x619 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நிவாரண நிதி குளறுபடிக்கு அரச அதிகாரிகளே பொறுப்பு: யாழ் மாவட்டச் செயலாளர் எச்சரிக்கை!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் 25,000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு விநியோகத்தில், தகுதியானவர்கள் புறக்கணிக்கப்பட்டாலோ அல்லது...

G7joV9tbwAAL77S
இலங்கைசெய்திகள்

அமெரிக்க உதவியுடன் நிவாரணப் பணிகள் தீவிரம்: C-130J விமானங்கள் கட்டுநாயக்காவை வந்தடைந்தன! 

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான நிவாரணப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், அமெரிக்க விமானப்படையின் இரண்டு C-130J...

images 8 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையம்: 21 கிலோ குஷ் போதைப்பொருளுடன் தம்பதியினர் கைது! 

கட்டுநாயக்க பன்னாட்டு விமான நிலையத்தில் சுமார் 25 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ‘குஷ்’ (Kush)...