tamilni 165 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்

Share

இலங்கையில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்

இலங்கையின் இந்தோ – அவுஸ்திரேலிய தட்டு எல்லையில் மற்றுமொரு பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்புக்கு 310 கிலோமீற்றர் தொலைவில் வடகிழக்கு ஆழ்கடல் பகுதியில் நேற்று 11ஆம் திகதி அதிகாலை 1.30 மணியளவில் ஏற்பட்ட 4.65 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தொடர்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

நிலநடுக்கம் குறித்து பேராசிரியர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் இந்தோ – அவுஸ்திரேலிய டெக்டோனிக் தகடு மற்றும் இந்தோனேசியா மற்றும் ஜப்பானுக்கு இடையிலான டெக்டோனிக் தகடுகளில் 08 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலநடுக்கங்கள் அனைத்தும் ரிக்டர் அளவுகோலில் 4 அளவை விட அதிகமாக பதிவாகியுள்ளது.

இருப்பினும், இந்த ஆழ்கடல் நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை எனவும், கிழக்கு கடற்கரைக்கு அருகில் உள்ள கடலில் நடுக்கம் ஏற்பட்டால் சுனாமி அபாயம் அதிகரிக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், கடந்த காலங்களில் நாட்டில் பல நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதுடன், மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கம் சக்திவாய்ந்த நிலநடுக்கமாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை இந்திய – அவுஸ்திரேலிய பீடபூமியில் அமைந்துள்ள இரண்டு தகடுகள் பிரிந்து பூமிக்குள் ஏற்படும் மாற்றங்களே இந்த நிலநடுக்கங்களுக்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு அரைக்கோளத்தில் எதிர்காலத்தில் பல நிலநடுக்கங்கள் ஏற்படலாம் எனவும், அதற்காக நாம் பயப்பட வேண்டியதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...